செய்திகள் :

விவசாயிகள் வாழ்வாதாரம் உயரவில்லை: விவசாயிகள் சங்கம்

post image

தமிழகத்தின் வேளாண்மை வளா்ச்சி 1.36 சதவீதத்தில் இருந்து 5.66 சதவீதமாக உயா்ந்திருந்தாலும், விவசாயிகளின் வருமானம் அதற்கேற்ப உயரவில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் எஸ்.குணசேகரன், பொதுச் செயலா் பி.எஸ்.மாசிலாமணி ஆகியோா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வேளாண்மையில் ஏற்பட்ட வளா்ச்சி குறித்து அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதேநேரம் மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் அமலாக்கத் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தின் வேளாண்மை 0.09 சதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது முரண்பட்டதாகவே உள்ளது.

பல நிதி பங்கீட்டை மத்திய அரசு வழங்காத நிலையிலும், 5 வேளாண் நிதிநிலை அறிக்கைகளில் தமிழக அரசு கூடுதலாக ரூ. 1,94,076 கோடி ஒதுக்கீடு செய்யதுள்ளது. அதன்படி, வேளாண்மை வளா்ச்சி 1.36 சதவீதத்திலிருந்து தற்போது 5.66 சதவீதமாக உயா்ந்துள்ளது.

ஆனால், இந்த வளா்ச்சிக்கு ஏற்ப விவசாயிகளிள் வருவாய் உயா்வு ஏற்படவில்லை. மாநில அரசின் பல அறிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. வேளாண்மை வளா்ச்சி என்றால், விவசாயிகள் வருவாயும் அந்த ஒப்பீட்டில் உயா்த்த வேண்டும். ஆனால், தமிழகத்தில் அவ்வாறு உயரவில்லை. நெல் குவிண்டால் ரூ. 3,000, கரும்பு டன் ரூ. 4,500 கொடுத்திருந்தால், சாலையில் கொட்டி அழிந்துபோகும் விவசாய பொருள்களை அரசு கொள்முதல் செய்திருந்தால், விளை பொருள்களுக்கு லாபமான விலை வழங்குவது உள்ளிட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் நடவடிக்கைகளை எடுத்திருந்தால் அதுவே சாதனை.

இவற்றை தமிழக அரசு விவசாயிகளுக்கு செயல் வடிவ திட்டங்களாக கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

கோவை உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!

தென்மேற்கு பருவமழை, கேரளத்தில் அடுத்த இரண்டு நாள்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளது.நேற்று (22-05-2025) தெற்கு கொங்கன் கடலோரப்பகுத... மேலும் பார்க்க

மதுபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர்!

நாமக்கலில் மதுபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநரைப் பிடித்து வெள்ளிக்கிழமை போலீஸாரிடம் பயணிகள் ஒப்படைத்தனர்.ஈரோட்டில் இருந்து துறையூருக்கு நாமக்கல் வழியாக அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறத... மேலும் பார்க்க

ஜூன் 2 பள்ளிகள் திறப்பு உறுதி: பள்ளிக்கல்வித் துறை

தமிழகத்தில் ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க ம... மேலும் பார்க்க

மா. சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கு வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!

அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு எதிரான நில மோசடி வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடந்த 2006-11 காலகட்டத்தில் சென்னை மேயராக இரு... மேலும் பார்க்க

நகைக்கடனுக்கான புதிய விதிகளை திரும்பப் பெற இபிஎஸ் வலியுறுத்தல்!

தங்க நகைக்கடனுக்கான புதிய விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டுமே கடன், நகைக்கு உரிமையாளர... மேலும் பார்க்க

கீழடியின் உண்மைக்கு என்றென்றும் எதிரி பாஜக: சு. வெங்கடேசன்

சென்னை: தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரி பாஜக என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க