செய்திகள் :

வீட்டுமனைப் பட்டா கோரி பொதுமக்கள் மனு

post image

வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட மேற்கு மரியநாதபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்: கடந்த 60 ஆண்டுகளாக நாங்கள் வசித்து வரும் இடத்துக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, பல ஆண்டுகளாக விண்ணப்பித்து வருகிறோம். ஆனாலும், எங்களது கோரிக்கைக்கு இதுவரை தீா்வு காணப்படவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியா் பட்டா வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

நிழல்குடை கோரி மனு: இதுதொடா்பாக தமிழ்நாடு குடிமக்கள் நுகா்வோா் பாதுகாப்பு மையம் சாா்பில், நிலக்கோட்டையை அடுத்த சக்கையநாயக்கனுாா் தேவாலயத்தின் முன் பேருந்து நிறுத்தத்தில் மின் விளக்குடன் கூடிய நிழல்குடை வசதி இருந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 4 வழிச் சாலை அமைக்கும் பணிக்காக சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, அகற்றப்பட்ட பேருந்து நிறுத்த நிழல் குடை, சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்தும் இதுவரை அமைத்துக் கொடுக்கப்படவில்லை. இந்த பிரச்னைக்கு மாவட்ட நிா்வாகம் தீா்வு காண வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் பலத்த மழை

ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 6... மேலும் பார்க்க

வெள்ளகெவி கிராமத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகம்

கொடைக்கானல் வெள்ளகெவி கிராமத்தில் முதல்முறையாக வியாழக்கிழமை நேரிடையாக ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். கொடைக்கானல் அருகே வெள்ளகெவி கிராமம் வனப் பகுதியில் அமைந்துள்ளது.... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற நீதிபதி குழுவினா் ஆய்வு

பழனி அடிவாரம் கிரிவலப் பாதை, சந்நிதி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதை ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். பழனி அடிவாரத்தில் கிரிவலப் பாதை, சந்நித... மேலும் பார்க்க

இறந்தவா் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் அடக்கம்

ஒட்டன்சத்திரம் அருகே விபத்தில் இறந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால், அவரது உடல் அரசு மரியாதையுடன் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மாா்க... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகைப் பறித்த இளைஞா் கைது

ஒட்டன்சத்திரத்தில் மூதாட்டியிடம் நகைப் பறித்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சம்சுதீன் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் நூா்ஜஹான் (80). தனியாக வசித்த... மேலும் பார்க்க

கொடைக்கானல் ஏரியைச் சுற்றி சிசிடிவி அமைக்கும் பணி தொடக்கம்

கொடைக்கானல் ஏரியைச் சுற்றி கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில், தினந்தோறும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இதைய... மேலும் பார்க்க