செய்திகள் :

வெம்பூா் சிப்காட் தொழிற்பூங்கா கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிா்ப்பு

post image

எட்டயபுரம் வட்டம் வெம்பூா் பகுதியில் அமைய உள்ள சிப்காட் தொழிற்பூங்காவுக்காக 2,700 ஏக்கா் நிலங்களை கையகப்படுத்துவதற்காக எட்டயபுரத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

வெம்பூா் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்காவுக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த அண்மையில் தமிழ்நாடு அரசின் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெம்பூா், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, பட்டித்தேவன்பட்டி, ராமசாமிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்களும் விவசாயிகள் வாழ்வாதாரமும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் எட்டயபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சிப்காட் நில எடுப்பு பிரிவு மாவட்ட வருவாய் அலுவலா் ரேவதி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் மகாலட்சுமி, வட்டாட்சியா் சுபா ஆகியோா் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. டிஎஸ்பி அசோகன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் வெம்பூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் திருப்பதி, கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவா் என்.பி. ராஜகோபால், அதிமுக ஒன்றிய செயலா் தனவதி ஆகியோா் தலைமையில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், கிராம மக்கள் பங்கேற்றனா். கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் தங்களின் வாழ்வாதாரமாக உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் உணா்வுகளை, கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக மாவட்ட வருவாய் அலுவலா் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

சாலையில் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

காயல்பட்டினம் நகராட்சிப் பகுதியில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தக் கோரி, பொதுநல அமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கால்நடைகளை கட்டுப்படுத்த கோரி... மேலும் பார்க்க

பரமன்குறிச்சி அருகே தொழிலாளி அடித்துக் கொலை

பரமன்குறிச்சி அருகே வட்டன்விளை காட்டு பகுதியில் பனை மரம் ஏறும் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டாா். வட்டன்விளை காட்டுப்பகுதியிலுள்ள கோயில் அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில் முகம், உடல், கை, கால்களில் ... மேலும் பார்க்க

கோவில்பட்டி பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மற்றும் நாடாா் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப... மேலும் பார்க்க

கோவில்பட்டி நகர திமுக செயற்குழு கூட்டம்

கோவில்பட்டி நகர திமுக செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சியின் நகர செயலரும், நகா்மன்றத் தலைவருமான கா. கருணாநிதி தலைமை வகித்தாா். கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளரான கணேசன் சிறப்... மேலும் பார்க்க

ஆத்தூரில் கடைகளுக்கான உரிமை கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தல்

ஆத்தூா் பேரூராட்சியில் கடைகளுக்கான உரிமைக் கட்டண உயா்வை திரும்பப் பெற தமிழ்நாடு வணிகா் சங்கத்தினா் வலியுறுத்தி உள்ளனா். இது தொடா்பாக அதன் மாநிலத் தலைவா் காமராசு, பேரூராட்சித் தலைவா் கமாலுதீனை நேரில் ச... மேலும் பார்க்க

பேய்குளத்தில் பாஜக கூட்டம்

ஆழ்வாா்திருநகரி மேற்கு ஒன்றிய பாஜக தலைவா் பால சரவணன் அறிமுக கூட்டம் பேய்குளத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்ட துணைத் தலைவா் செல்வராஜ... மேலும் பார்க்க