செய்திகள் :

வெற்றிகரமாக முடிந்த ட்ரம்ப் - ஜின்பிங் சந்திப்பு; என்னென்ன முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன?

post image

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில்...

கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தான், முதன்முதலாக வரி என்ற அஸ்திரத்தைக் கையிலெடுத்தார் ட்ரம்ப். அமெரிக்கப் பொருள்கள் மீது அனைத்து நாடுகளும் அதிக வரி விதிக்கிறது... அமெரிக்காவில் பெரிய அளவில் வர்த்தக பற்றாக்குறை உள்ளது... என்று உலக நாடுகள் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சகட்டு மேனிக்கு வரிகளைப் போட்டு தாக்கினார்.

ட்ரம்ப் - ஜி ஜின்பிங்
ட்ரம்ப் - ஜி ஜின்பிங்

இதில் பிற நாடுகளுக்கு கால அவகாசம் கொடுத்தாலும் சீனாவிற்கு எந்த சலுகையும் கொடுக்கவில்லை. இதற்கு பதிலடியாக சீனா அமெரிக்கா மீது வரி விதிக்க, அமெரிக்கா மீண்டும் வரியை ஏற்றியது. இப்படி மாற்றி மாற்றி ஏற்றி சீனா மீதான வரிகள் 145 சதவிகிதம் வரை சென்றது... அமெரிக்கா மீதான வரி 110 சதவிகிதம் வரை சென்றது.

ஜூன் மாதம் சமாதானம் ஏற்பட இரு நாடுகளும் வரியை நிறுத்தி வைத்தது.

அதன் பிறகு, பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடந்து வந்தது.

கூடுதல் 100 சதவிகிதம் வரி...

கடந்த மாதம், சீனா தான் ஏற்றுமதி செய்யும் சில கனிம வளங்களுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்தது. இது உலக வர்த்தகங்களைப் பாதிக்கும் என்று ட்ரம்ப் சீனா மீது கூடுதல் 100 சதவிகித வரி என அறிவித்தார்.

இது வர்த்தக போராக உருமாறுமோ என்று நினைத்திருந்த நேரத்தில் தான், ட்ரம்ப் - ஜி ஜின்பிங் சந்திப்பு நடந்துள்ளது.

இந்தச் சந்திப்பிற்கு தயாராவதைப் போல, சமீபத்தில் அமெரிக்காவிடம் இருந்து இரண்டு தொகுதி சோயா பீன்ஸ்களை வாங்கியுள்ளது சீனா. சீனா அமெரிக்காவிடம் இருந்து சோயா பீன்ஸ் வாங்குவது ட்ரம்பின் தொடர் எதிர்பார்ப்பு ஆகும்.

ட்ரம்ப் - ஜி ஜின்பிங்
ட்ரம்ப் - ஜி ஜின்பிங்

சந்திப்பு...

நாளை தென் கொரியாவில் ஆசியா - பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடக்க உள்ளது. இதில் கலந்துகொள்ள சென்ற ட்ரம்ப், ஜின்பிங் சந்தித்துகொண்டுள்ளனர்.

கடைசியாக, ட்ரம்ப் முதல்முறையாக அமெரிக்க அதிபராக இருந்தப்போது சந்தித்துகொண்டார்கள். அதன் பிறகு, இப்போது தான் இருவரும் சந்தித்து கொள்கிறார்கள்.

இந்தச் சந்திப்பு தென் கொரியாவின் புசானில் நடந்தது.

என்னென்ன முடிவானது?

இந்தச் சந்திப்பின் முடிவில், சீனா மீது அமெரிக்கா விதித்திருந்த வரியான 57 சதவிகிதம் 47 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

சீனா அமெரிக்காவிடம் இருந்து சோயா பீன்ஸ் வாங்குவதாக கூறியுள்ளது.

அரிய கனிமங்களின் மீது சீனா விதித்துள்ள கட்டுப்பாடுகளிலும் சமாதானம் எட்டப்பட்டுள்ளது. ஆனால், அது குறித்து இன்னும் விரிவாக தெரியவில்லை.

இரு நாடுகளும் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் மேலும் ஈடுபட முடிவு செய்துள்ளது.

இதனால்...

இந்தச் சந்திப்பிற்கு 10-க்கு 12 மதிப்பெண்களைக் கொடுத்துள்ளார் ட்ரம்ப். ஜின்பிங்குமே இந்தச் சந்திப்பில் திருப்தியாக உள்ளார். இதனால், இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையே பாசிட்டிவ் முடிவை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல்.. உலக நாடுகளின் வர்த்தகங்களிலுமே ஒரு பாசிட்டிவிட்டியைத் தரும்.

Modi: "திமுக, காங்கிரஸ் பீகார் மக்களை அவமதிக்கிறது" - பீகாரில் பிரதமர் பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 30) இந்தியா கூட்டணி கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் மற்றும் திமுக பீகார் மக்களை அவமானப்படுத்துவதாக பேசி உள்ளார்.பீகார் மாநிலம் சக்கரா பகுதியில் நடந்த பா... மேலும் பார்க்க

'விஜய்யின் விருப்பம்; திமுகவின் நெருக்கடி; அதிமுகவோடு கூட்டணியில்லை!' - உறுதியாக கூறும் அருண் ராஜ்!

கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் தவெக கட்சி மீண்டும் செயல்பட தொடங்கியிருக்கிறது. கட்சியின் அன்றாட செயல்பாடுகளை கவனிக்க 28 உறுப்பினர்களை கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. முக்கிய நிர்வாகிகள் ... மேலும் பார்க்க

`இவர்கள் திமுக பி டீம்' - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இன்று (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ... மேலும் பார்க்க

பசும்பொன்: தேவர் நினைவிட பூசாரி கன்னத்தில் அறைந்த ஸ்ரீதர் வாண்டையார்; தர்ணாவும் செய்ததால் பரபரப்பு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பூசாரியை மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஶ்ரீதர் வாண்டையார்பார்வர்ட் பிளாக் கட்சி... மேலும் பார்க்க

SIR Row : `அதிமுக வரவேற்பதும், திமுக எதிர்ப்பதும் ஏன்?' - முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் | களம் 1

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)முன்னாள் அமைச்சர்கட்டுரையாளர்: முனைவர் வைகைச்... மேலும் பார்க்க

புதுச்சேரியை உலுக்கிய மருந்து கொள்முதல் முறைகேடு - சிக்கிய அதிகாரிகள்; சிக்கலில் ஆட்சியாளர்கள்

புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நலவழி மையங்களில் கடந்த 2018-19 ஆண்டு கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. ஆனால் அந்த மாத்திரைகளை சாப்பிட்ட கர்ப்... மேலும் பார்க்க