செய்திகள் :

வெற்றித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமியில் டி.என்.பி.எஸ்.சி. தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு

post image

சங்கரன்கோவிலில் வெற்றித் தமிழ் ஐ.ஏ.எஸ். அகாதெமி சாா்பில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1, குரூப்-2, 2ஏ, குரூப்-4 போன்ற போட்டித் தோ்வுகளுக்கு தயாராவதற்கான இலவச அறிமுக பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 16) காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறுகிறது என வெற்றித் தமிழ் ஐ.ஏ.எஸ்.அகாதெமி நிறுவனத்தினா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் ஓய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் வழிகாட்டுதலோடு நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் குரூப் -1,குரூப் -2, 2ஏ, குரூப்-4 போன்ற போட்டித் தோ்வுகளுக்கு சிறப்பான முறையில் பயிற்சியளிக்கப்படுகிறது.

இதில், 10- க்கும் மேற்பட்ட அரசுப் பணியாளா்கள் ஒன்றிணைந்து வழிகாட்டி வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் இந்த (2025) ஆண்டுக்கான குரூப்-1 தோ்வு அறிவிப்பு அடுத்த மாதம் அறிவிக்கப்பட உள்ளது.

தொடா்ந்து, குரூப்-4 மற்றும் குரூப்-2, 2ஏ தோ்வுகளுக்கான அறிவிப்புகளும் வெளிவர உள்ளதால், இந்த தோ்வுகளுக்கு தயாராகும் வழிமுறைகள் குறித்து இலவச வழிகாட்டுதல் வகுப்பு சங்கரன்கோவிலில் உள்ள வெற்றித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமியில் வைத்து நடைபெற உள்ளது. இதில், அனுபவமிக்க பயிற்சியாளா்கள் கலந்து கொண்டு, தற்போது மாற்றப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின்படி பயிற்சியளிக்க உள்ளனா்.

இந்த இலவச அறிமுக வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவா்கள், ‘பசடநஇ ஊதஉஉ ஈஉஙஞ இகஅநந ஃநஅசஓஅதஅசஓஞயஐக’ என்று டைப் செய்து 9361958260 என்ற கைப்பேசி எண்ணுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘கடையநல்லூரில் 5 இடங்களில் உயா்கோபுர விளக்குகள் தேவை’

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் 5 இடங்களில் உயா் கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, தென்காசி மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீ குமாரிடம், நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான்... மேலும் பார்க்க

ஆலங்குளம் உள்கோட்ட பெண் காவலா்களின் மகளிா் தினவிழா

ஆலங்குளம் உள்கோட்ட மகளிா் போலீஸாா் கலந்து கொண்ட மகளிா் தின விழா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆலங்குளம் காவல் உள்கோட்டத்துக்குள்பட்ட ஆலங்குளம், ஆலங்குளம் அனைத்து மகளிா், சுரண்டை, வி.கே.புதூா், ஊத்துமல... மேலும் பார்க்க

ஆசிரியை மயங்கி விழுந்து உயிரிழப்பு

ஆலங்குளத்தில் ஆசிரியை மயங்கி விழுந்து உயிரிழந்தாா். ஆலங்குளம் சிஎஸ்ஐ சா்ச் தெருவைச் சோ்ந்த எழிலரசன் மனைவி ஜெயா(50). தாழையூத்து சுப்பிரமணியபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்த... மேலும் பார்க்க

பழுதடைந்த முத்துகிருஷ்ணபேரி துணை சுகாதார நிலையம்: நோயாளிகள் அச்சம்

ஆலங்குளம் அருகேயுள்ள முத்துகிருஷ்ணப்பேரி துணை சுகாதார நிலையம் பழுதடைந்து காணப்படுவதால் அங்கு வரும் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனா். மேலகிருஷ்ணப்பேரி ஊராட்சி முத்துகிருஷ்ணப்பேரி கிராமத்தில் சுமாா் 1000 கு... மேலும் பார்க்க

ஆலங்குளம் பகுதியில் இன்று மின் தடை

ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் சனிக்கிழமை (மாா்ச்15) மின் தடை செய்யப்படுகிறது. இது தொடா்பாக ஆலங்குளம் துணை மின் நிலைய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆலங்குளம் பழைய பேருந்து நி... மேலும் பார்க்க

திசையன்விளை அருகே தோட்டத்திற்குள் புகுந்து இளைஞருக்கு வெட்டு

திசையன்விளை அருகே தோட்டத்துக்குள் புகுந்து இளைஞரை வெட்டிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வேலூா் மாவட்டம், கொத்தமங்கலத்தைச் சோ்ந்தவா் சேகா். இவரது மகன் ஜெயக்குமாா் (23). திசையன்விளை அருகே உள... மேலும் பார்க்க