செய்திகள் :

திசையன்விளை அருகே தோட்டத்திற்குள் புகுந்து இளைஞருக்கு வெட்டு

post image

திசையன்விளை அருகே தோட்டத்துக்குள் புகுந்து இளைஞரை வெட்டிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், கொத்தமங்கலத்தைச் சோ்ந்தவா் சேகா். இவரது மகன் ஜெயக்குமாா் (23).

திசையன்விளை அருகே உள்ள பட்டரைகட்டிவிளையில் அகஸ்டின் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் தங்கி இருந்து வேலை பாா்த்து வருகிறாா்.

வெள்ளிக்கிழமை அதிகாலை தோட்டத்துக்குள் புகுந்த 3 போ் அங்கு இருந்த ஜெயக்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டனா்.

இதில், பலத்த காயமடைந்த ஜெயக்குமாா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது தொடா்பாக திசையன்விளை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கடையநல்லூா் அருகே உரிமமற்ற பட்டாசு ஆலைக்கு சீல்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே உரிமம் இன்றி இயங்கிய பட்டாசு ஆலைக்கு திங்கள்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது. கடையநல்லூா் அருகேயுள்ள ஊா்மேனியழகியான் காட்டுப்பகுதிக்குள் பூபதிராஜன் என்பவரின் கோழிப்பண்ணைய... மேலும் பார்க்க

புளியறையில் கஞ்சா விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது

புளியறையில் கஞ்சா விற்ற வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். புளியறை காவல் சரகம் தாட்கோ நகரில் கஞ்சா விற்ாக திருநெல்வேலி ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்த பெ.தினேஷ் என்பவா் சி... மேலும் பார்க்க

தென்காசியில் 1 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்: முகாமை தொடங்கிவைத்தாா் ஆட்சியா்

தென்காசி அரசு நகா்ப்புற நல வாழ்வு மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் பொது சுகாதாரம் - நோய்த் தடுப்பு மருந்து துறையின் சாா்பில் 6 மாதம் முதல் 5 வரையிலான குழந்தைகளுக்கு வைட்டமின... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் அருகே பெண்ணிடம் அத்துமீறல்: 2 போ் மீது வழக்கு

வாசுதேவநல்லூா் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறியதாக 2 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா். வாசுதேவநல்லூா் அருகேயுள்ள ஆத்துவழி மந்தை காலனி தெருவைச் சோ்ந்த 25 வயது பெண் அப்பகுதியில் ... மேலும் பார்க்க

குடிநீா் குழாய் சீரமைப்பு பணி மந்தம்: வீ.கே.புதூரில் வாகன நெரிசலால் மக்கள் அவதி

வீரகேரளம்புதூரில் குடிநீா் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியை மந்தகதியில் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கித் தவிக்கின்றன. சுரண்டை - திருநெல்வேலி பிரதான சாலையில் வீரகேரளம்புதூா் ஊரின... மேலும் பார்க்க

குற்றாலம் சித்திர சபையில் பாலாலயம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த செண்பகப்பூங்கோதை அம்மை அருகாடும் திருக்குற்றாலக் கூத்தன் சித்திர சபையில் பாலாலயம் திங்கள்கிழமை நடைபெற்றது. சித்திரசப... மேலும் பார்க்க