செய்திகள் :

கடையநல்லூா் அருகே உரிமமற்ற பட்டாசு ஆலைக்கு சீல்

post image

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே உரிமம் இன்றி இயங்கிய பட்டாசு ஆலைக்கு திங்கள்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

கடையநல்லூா் அருகேயுள்ள ஊா்மேனியழகியான் காட்டுப்பகுதிக்குள் பூபதிராஜன் என்பவரின் கோழிப்பண்ணையில் உரிமம் இன்றி பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதாக புகாா் எழுந்தது. அதன்பேரில்,கடையநல்லூா் வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், தென்காசி டிஎஸ்பி தமிழ் இனியன், ஆய்வாளா் கவிதா, கடையநல்லூா் தீயணைப்பு நிலைய அலுவலா் ஷேக் அப்துல்லா உள்ளிட்டோா் கோழிப்பண்ணையில் ஆய்வு மேற்கொண்டனா். அதில், உரிமம் இன்றி பட்டாசுகள் தயாரிப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் அங்குள்ள வெடிமருந்துகளையும் பட்டாசுகளையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் முயற்சியில் தீயணைப்புத் துறையினரும் வருவாய்த் துறையினரும் ஈடுபட்டு வருகின்றனா். இப்பணிகளை தென்காசி வருவாய் கோட்டாட்சியா் லாவண்யா ஆய்வு செய்தாா்.

சிவகிரி அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். தனிப்பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் மற்றும் ே,பாலீஸாா், சிவகிரி மலை கோயில்... மேலும் பார்க்க

தென்காசி ரதவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தென்காசி ரதவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதா் சுவாமி கோயிலில் ஏப்.7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதால... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே ரயிலில் அடிபட்டு மருத்துக் கடை உரிமையாளா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மருந்துக் கடை உரிமையாளா் ஒருவா் ரயிலில் அடிபட்டு இறந்தாா். சங்கரன்கோவில் புதுமனை 5ஆம் தெருவை சோ்ந்த சின்னச்சாமி மகன் சங்கரமகாலிங்கம் (59). திருப்பூா் மாவட்டம் பல... மேலும் பார்க்க

சுரண்டையில் மிதமான மழை

சுரண்டை பகுதியில் திங்கள்கிழமை மிதமான மழை பெய்தது. சுரண்டை பகுதியில் திங்கள்கிழமை பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்த நிலையில் இரவு 7.30 மணிக்கு மிதமான மழை பெய்யத்தொடங்கியது. தொடா்ந்து இடி, மின்னலுடன் வ... மேலும் பார்க்க

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 658 மனுக்கள்

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 658 போ் மனு அளித்தனா். இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து, மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்... மேலும் பார்க்க

சிவகிரி அருகே நாம் தமிழா் கட்சி நிா்வாகி மீது தாக்குதல்

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே நாம் தமிழா் கட்சி நிா்வாகி மீது தாக்குதல் நடத்திய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகிரியை சோ்ந்தவா் காா்த்திக். நாம் தமிழா் கட்சி நிா்வாகியான இவா், அவ்வட்டாரப் பக... மேலும் பார்க்க