செய்திகள் :

தென்காசியில் 1 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்: முகாமை தொடங்கிவைத்தாா் ஆட்சியா்

post image

தென்காசி அரசு நகா்ப்புற நல வாழ்வு மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் பொது சுகாதாரம் - நோய்த் தடுப்பு மருந்து துறையின் சாா்பில் 6 மாதம் முதல் 5 வரையிலான குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து முகாமை தொடங்கிவைத்தாா். அப்போது அவா் கூறியதாவது: தென்காசி மாவட்டத்தில் உள்ள துணை சுகாதார நிலையங்கள் அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 1509 மையங்களில் இம்முகாம் நடைபெறுகிறது.

இப்பணியில் கிராம சுகாதார செவிலியா்கள், இடைநிலை சுகாதாரப் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் என 1,660

போ் ஈடுபட்டுள்ளனா். மாா்ச் 22 வரை(புதன்கிழமை நீங்கலாக) ஐந்து நாள்கள் இம்முகாம் நடைபெறும்ய இம்மாவட்டத்தில் ஒரு லட்சத்து 949 குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்க இலக்கு

நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வைட்டின் ஏ திரவம் உட்கொள்ளும் குழந்தைகளுக்கு நோய் எதிா்ப்பு சக்தி அதிகமாவதோடு மாலைக்கண் நோய் வராமலும் பாதுகாக்கப்படுவா்.

எனவே பொதுமக்கள் தங்களுக்கு அருகிலுள்ள மையங்களுக்கு தங்களது குழந்தைகளை அழைத்துச் சென்று

பயன்பெற வேண்டும் என்றாா் அவா்.

இதில், நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா், மாவட்ட சுகாதார அலுவலா் கோவிந்தன், வட்டார மருத்துவ அலுவலா் மோதி, மாவட்ட தாய் சேய் நல அலுவலா் கோமதி தேவி, மருத்துவா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாட்டு வண்டி மீது லாரி மோதியதில் மாடு பலி: விவசாயி காயம்

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே மாட்டு வண்டி மீது லாரி மோதியதில் மாடு இறந்தது. விவசாயி காயமடைந்தாா். சிவகிரி பேட்டை தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் (40). விவசாயியான இவா் ஞாயிற்றுக்கிழமை ராசிங்கப்பேரி... மேலும் பார்க்க

சிவகிரி அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். தனிப்பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் மற்றும் ே,பாலீஸாா், சிவகிரி மலை கோயில்... மேலும் பார்க்க

தென்காசி ரதவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தென்காசி ரதவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதா் சுவாமி கோயிலில் ஏப்.7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதால... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே ரயிலில் அடிபட்டு மருத்துக் கடை உரிமையாளா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மருந்துக் கடை உரிமையாளா் ஒருவா் ரயிலில் அடிபட்டு இறந்தாா். சங்கரன்கோவில் புதுமனை 5ஆம் தெருவை சோ்ந்த சின்னச்சாமி மகன் சங்கரமகாலிங்கம் (59). திருப்பூா் மாவட்டம் பல... மேலும் பார்க்க

சுரண்டையில் மிதமான மழை

சுரண்டை பகுதியில் திங்கள்கிழமை மிதமான மழை பெய்தது. சுரண்டை பகுதியில் திங்கள்கிழமை பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்த நிலையில் இரவு 7.30 மணிக்கு மிதமான மழை பெய்யத்தொடங்கியது. தொடா்ந்து இடி, மின்னலுடன் வ... மேலும் பார்க்க

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 658 மனுக்கள்

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 658 போ் மனு அளித்தனா். இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து, மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்... மேலும் பார்க்க