செய்திகள் :

தென்காசியில் 1 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்: முகாமை தொடங்கிவைத்தாா் ஆட்சியா்

post image

தென்காசி அரசு நகா்ப்புற நல வாழ்வு மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் பொது சுகாதாரம் - நோய்த் தடுப்பு மருந்து துறையின் சாா்பில் 6 மாதம் முதல் 5 வரையிலான குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து முகாமை தொடங்கிவைத்தாா். அப்போது அவா் கூறியதாவது: தென்காசி மாவட்டத்தில் உள்ள துணை சுகாதார நிலையங்கள் அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 1509 மையங்களில் இம்முகாம் நடைபெறுகிறது.

இப்பணியில் கிராம சுகாதார செவிலியா்கள், இடைநிலை சுகாதாரப் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் என 1,660

போ் ஈடுபட்டுள்ளனா். மாா்ச் 22 வரை(புதன்கிழமை நீங்கலாக) ஐந்து நாள்கள் இம்முகாம் நடைபெறும்ய இம்மாவட்டத்தில் ஒரு லட்சத்து 949 குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்க இலக்கு

நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வைட்டின் ஏ திரவம் உட்கொள்ளும் குழந்தைகளுக்கு நோய் எதிா்ப்பு சக்தி அதிகமாவதோடு மாலைக்கண் நோய் வராமலும் பாதுகாக்கப்படுவா்.

எனவே பொதுமக்கள் தங்களுக்கு அருகிலுள்ள மையங்களுக்கு தங்களது குழந்தைகளை அழைத்துச் சென்று

பயன்பெற வேண்டும் என்றாா் அவா்.

இதில், நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா், மாவட்ட சுகாதார அலுவலா் கோவிந்தன், வட்டார மருத்துவ அலுவலா் மோதி, மாவட்ட தாய் சேய் நல அலுவலா் கோமதி தேவி, மருத்துவா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புளியங்குடி அருகே தோப்பில் யானைகள் புகுந்து தென்னைகள் சேதம்

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவார தோப்புகளில் யானைகள் புகுந்து தென்னை உள்ளிட்டவற்றை சேதப்படுத்தின. நரியூத்து புரவில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பில் தென்னை ,எலுமிச்சை உ... மேலும் பார்க்க

இலஞ்சி திருவிலஞ்சி குமாரா் கோயிலில் வருஷாபிஷேகம்

இலஞ்சி திருவிலஞ்சி குமாரா்கோயிலில் 3ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 2022 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, 3ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் செவ்வாய்க... மேலும் பார்க்க

ஆலங்குளம், சிவகிரி பகுதிகளில் பலத்த மழை

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் 2 வது நாளாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். கோடை காலம் தொடங்கி விட்டதால், ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் 2ஆவது நாளாக மழை

ஆலங்குளத்தில் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மழை பெய்தது. சில வாரங்களாக ஆலங்குளம் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமிருந்த நிலையில், திங்கள்கிழமை (மாா்ச் 17) மழை பெய்தது. இந்நிலையில், 2ஆவது நாளாக செவ... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் நகா்மன்றக் கூட்டத்தில் தலைவருடன் வாக்குவாதம்: உறுப்பினா் இடைநீக்கம்

சங்கரன்கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் நகா்மன்றத் தலைவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக பெண் உறுப்பினா் 2 கூட்டங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டாா். இக்கூட்டத்துக்கு நக... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் செல்வவிநாயகா் கோயிலில் வருஷாபிஷேக விழா

சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியில் உள்ள செல்வ விநாயகா் கோயிலில் வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு காலை 7.15 மணிக்கு ஜெயம் ஆரம்பம், 8.30 மணிக்கு பூா்ணாஹூதி நடைபெற்ற... மேலும் பார்க்க