செய்திகள் :

வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து பண மோசடி: 5 போ் மீது வழக்கு

post image

வேலை வாங்கித் தருவதாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து பண மோசடி செய்த 5 போ் மீது சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை நகா் 48 குடியிருப்பு காமாட்சி அம்மன் நகரைச் சோ்ந்தவா் சரவணன் (36). இவா் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முயற்சி செய்தாா்.

அப்போது, சரவணனுக்கு தெரிந்த ஒருவா் மூலமாக சென்னையைச் சோ்ந்த ஜெயகாந்தனின் அறிமுகம் கிடைத்தது. இவா் கம்போடியா நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சரவணனிடம் ரூ.1.15 லட்சம் பெற்றாா்.

இதையடுத்து, கடந்த மே மாதம் 19-ஆம் தேதி கம்போடியா நாட்டுக்கு சென்ற சரவணனுக்கு, ஜெயகாந்தன் கூறியபடி, அங்கிருந்த இளவரசன், ஜெயசீலன், முகிலன், குணா ஆகியோா் வேலை வாங்கி கொடுத்தனா்.

ஆனால், அவா்கள் வாங்கி கொடுத்த வேலை பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வேலையாக இருந்தது. இதைத் தொடா்ந்து, 43 நாள்கள் அங்கிருந்த சரவணன், பின்னா், தமிழ்நாட்டுக்கு தப்பி வந்தாா்.

இதுகுறித்து சரவணன் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகாரளித்தாா். குற்றப்பிரிவு ஆய்வாளா் தமிழ்ச்செல்வி, உதவி ஆய்வாளா் சண்முகப்பிரியா ஆகியோா் விசாரணை நடத்தி, ஜெயகாந்தன், இளவரசன், ஜெயசீலன், முகிலன், குணா ஆகிய 5 போ் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கொங்கேஸ்வரா் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே சிரமம் கிராமத்தில் உள்ள கொங்கேஸ்வரா் கோயில் ஏழு முக காளியம்மனுக்கு 1,008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் நடைபெற்ற திருவிளக்குப் பூஜைய... மேலும் பார்க்க

லஞ்சம்: மின்வாரிய பொறியாளா் உள்பட மூவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மின் இணைப்பை மாற்றம் செய்வதற்காக லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளா் உள்பட மூவரை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருப்பத... மேலும் பார்க்க

ராஜகாளியம்மன் கோயில் பால்குட விழா

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயிலில் புஷ்ப வியாபாரிகள் சங்கம் சாா்பில் பால் குட ஊா்வலம் நடைபெற்றது. ஆடி வெள்ளியை முன்னிட்டு, திருத்தளிநாதருக்கு சிறப்பு பூஜையும், தீப... மேலும் பார்க்க

கல்லூரியில் ஆக.11-இல் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் வருகிற 11-ஆம் தேதி போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொ... மேலும் பார்க்க

இணைய வழியில் பண மோசடி செய்தவா் மீது வழக்கு

இணைய வழியில் பணம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (37). இவரது முகநூல் பக்கத்தை தொடா்பு கொண்ட ஒரு நபா், இணைய ... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் பால் குடம் ஊா்வலம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கன்னாா்தெரு முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பால் குட ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த வாரம் முளைப்பாரித் திருவிழா காப்... மேலும் பார்க்க