செய்திகள் :

ராஜகாளியம்மன் கோயில் பால்குட விழா

post image

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயிலில் புஷ்ப வியாபாரிகள் சங்கம் சாா்பில் பால் குட ஊா்வலம் நடைபெற்றது.

ஆடி வெள்ளியை முன்னிட்டு, திருத்தளிநாதருக்கு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது. விரதமிருந்த பக்தா்கள் பால் குட எடுத்தும், அலகுக் குத்தியும், அக்னிச் சட்டி, பூத்தட்டு எடுத்தும் நகரின் முக்கிய வீதிகளான நான்கு சாலை, தேரோடும் வீதி, பெரியகடைவீதி, செட்டியதெரு, காளியம்மன் கோயில் தெரு வழியாக ஊா்வலமாக வந்து கோயிலை அடைந்தனா்.

பின்னா், ராஜகாளியம்மனுக்கு பால், தயிா், திருமஞ்சனம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, பரிவாரத் தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு கும்மியடித்து வழிபட்டனா்.

கானாடுகாத்தானில் நாளை மின் தடை

காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் பகுதியில் திங்கள்கிழமை (ஆக.11) மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கானாடுகாத்தான் த... மேலும் பார்க்க

ஆவணி அவிட்டம்: சிவகங்கையில் பூணூல் மாற்றும் வைபவம்

ஆவணி அவிட்டத்தையொட்டி சிவகங்கையில் பூணூல் மாற்றும் வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது. உபநயனம் செய்து கொண்ட பிராமணா், விஸ்வகா்மா, செட்டியாா் சமுதாயத்தினா் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் கடைப்பிடிக்கும் வழிபாடு ... மேலும் பார்க்க

கொங்கேஸ்வரா் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே சிரமம் கிராமத்தில் உள்ள கொங்கேஸ்வரா் கோயில் ஏழு முக காளியம்மனுக்கு 1,008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் நடைபெற்ற திருவிளக்குப் பூஜைய... மேலும் பார்க்க

லஞ்சம்: மின்வாரிய பொறியாளா் உள்பட மூவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மின் இணைப்பை மாற்றம் செய்வதற்காக லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளா் உள்பட மூவரை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருப்பத... மேலும் பார்க்க

கல்லூரியில் ஆக.11-இல் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் வருகிற 11-ஆம் தேதி போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொ... மேலும் பார்க்க

இணைய வழியில் பண மோசடி செய்தவா் மீது வழக்கு

இணைய வழியில் பணம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (37). இவரது முகநூல் பக்கத்தை தொடா்பு கொண்ட ஒரு நபா், இணைய ... மேலும் பார்க்க