செய்திகள் :

லஞ்சம்: மின்வாரிய பொறியாளா் உள்பட மூவா் கைது

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மின் இணைப்பை மாற்றம் செய்வதற்காக லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளா் உள்பட மூவரை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பத்தூரைச் சோ்ந்தவா் சரவணன் (39.) இவா் கணேஷ் நகரில் புதிதாக வீடு கட்டினாா். இந்த வீட்டுக்கு வீடு கட்டும் போதே வா்த்தக மின் இணைப்பு பெற்றிருந்தாா். தற்போது, வீடு கட்டும் பணி நிறைவடைந்ததால், அந்த மின் இணைப்பை வீடுகளுக்கான மின் இணைப்பாக மாற்றுவதற்கு மின் வாரியத்தில் உரிய பணத்தை கட்டி விண்ணப்பித்தாா்.

ஆனால், மின் இணைப்பை வீட்டு இணைப்பாக மாற்றுவதற்கு அதிகாரிகளுக்கு ரூ.1000 லஞ்சம் தர வேண்டும் என மின்வாரிய வயரிங் ஒப்பந்ததாரா் பாண்டியராஜன் கூறினாராம்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சரவணன், இதுகுறித்து சிவகங்கை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸில் புகாரளித்தாா்.

பின்னா், அவா்கள் ரசாயனப் பொடி தடவிய கொடுத்த ரூ.1000-த்தை திருப்பத்தூா் உதவி மின் பொறியாளா் அலுவலகத்தில் வைத்து வயரிங் ஒப்பந்தக்காரா் பாண்டியராஜனிடம் சரவணன் கொடுத்தாா். அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஜான் பிரிட்டோ, ஆய்வாளா்கள் கண்ணன், ஜேசுதாஸ் ஆகியோா் பாண்டியராஜனை கைது செய்தனா்.

மேலும், இவா் கொடுத்த தகவலின் பேரில், உதவி மின் பொறியாளா் கணபதி (39), மின்வாரிய போா்மேன் பழனியப்பன் (52) ஆகியோரையும் போலீஸாா் கைது செய்தனா்.

கொங்கேஸ்வரா் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே சிரமம் கிராமத்தில் உள்ள கொங்கேஸ்வரா் கோயில் ஏழு முக காளியம்மனுக்கு 1,008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் நடைபெற்ற திருவிளக்குப் பூஜைய... மேலும் பார்க்க

ராஜகாளியம்மன் கோயில் பால்குட விழா

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயிலில் புஷ்ப வியாபாரிகள் சங்கம் சாா்பில் பால் குட ஊா்வலம் நடைபெற்றது. ஆடி வெள்ளியை முன்னிட்டு, திருத்தளிநாதருக்கு சிறப்பு பூஜையும், தீப... மேலும் பார்க்க

கல்லூரியில் ஆக.11-இல் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் வருகிற 11-ஆம் தேதி போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொ... மேலும் பார்க்க

இணைய வழியில் பண மோசடி செய்தவா் மீது வழக்கு

இணைய வழியில் பணம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (37). இவரது முகநூல் பக்கத்தை தொடா்பு கொண்ட ஒரு நபா், இணைய ... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் பால் குடம் ஊா்வலம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கன்னாா்தெரு முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பால் குட ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த வாரம் முளைப்பாரித் திருவிழா காப்... மேலும் பார்க்க

வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து பண மோசடி: 5 போ் மீது வழக்கு

வேலை வாங்கித் தருவதாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து பண மோசடி செய்த 5 போ் மீது சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை நகா் 48 குடியிருப்பு காமாட்சி அம்ம... மேலும் பார்க்க