செய்திகள் :

வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கு 100% வரி: டிரம்ப் உத்தரவு

post image

அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் படங்களுக்கு 100 சதவிகிதம் வரி விதிக்கும் நடைமுறையைத் தொடங்க அந்நாட்டு வணிகத் துறைக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இதனால், அமெரிக்காவில் திரையரங்குகளில் வெளியாகும் இந்தியா, கொரியா உள்பட பிற நாடுகளின் படங்களுக்கான டிக்கெட் கட்டணம் அதிகரிக்கும் சூழல் எழுந்துள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றத்தில் இருந்து வெளிநாட்டு பொருள்கள் இறக்குமதிக்கு எதிராக வரி உயர்வு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, சர்வதேச வர்த்தகப் போர் தொடங்கியிருப்பதாக பிற நாட்டுத் தலைவர்கள் விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் படங்களை குறிவைத்து வரியை உயர்த்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, ட்ரூத் சோசியல் சமூக ஊடகப் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“அமெரிக்காவின் திரைத்துறை மற்றும் ஹாலிவுட் மிக வேகமாக பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மற்ற நாடுகள் திரைப்படங்களை அமெரிக்காவில் தயாரிப்பதை முடக்க அனைத்து வகையான சலுகைகளையும் வழங்குகின்றனர். இது மற்ற நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சியாக இருக்கிறது. எனவே, இது தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.

அனைத்துக்கும் மேலாக வெளிநாட்டுப் படங்கள் பிரசார பாணியில் எடுக்கப்படுகின்றன. எனவே, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு, நமது நாட்டில் திரையிடப்படும் அனைத்து படங்களுக்கும் 100 சதவிகிதம் வரி விதிக்கும் நடைமுறையை உடனடியாகத் தொடங்க வணிகத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

நமது நாட்டிற்குள் வரும் வெளிநாட்டுத் திரைப்படங்கள் அனைத்திற்கும் 100% வரி விதிக்கும் செயல்முறையை உடனடியாகத் தொடங்க வணிகத் துறைக்கும், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிக்கும் நான் அதிகாரம் அளிக்கிறேன். எங்களுக்கு மீண்டும் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் படங்கள் வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

https://truthsocial.com/@realDonaldTrump/posts/114452117143235155

இதையும் படிக்க : பாகிஸ்தான்: பயங்கரவாதிக்கு இறுதிச் சடங்கு நடத்த இஸ்லாமிய மதகுருக்கள் மறுப்பு!

மறைந்த போப் பிரான்சிஸின் கடைசி ஆசை!

வாடிகன்: மறைந்த போப் பிரான்சிஸின் கடைசி ஆசை என்ன என்பது வெளியாகியுள்ளது. போப்பாண்டவர் தாம் பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தை மருத்துவ வசதிகள் அடங்கியதொரு நடமாடும் கிளினிக் ஆக உபயோகித்துக்கொள்ள பணித்த... மேலும் பார்க்க

போர்ப்பதற்றம்: பாக்., இந்தியாவுக்கு ஈரான் அமைச்சர் வருகை!

புதுதில்லி: ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி மே 8-ஆம் தேதி இந்தியா வருகிறார்.ஈரானிலிருந்து முதலில் பாகிஸ்தான் செல்லும் அவர், அங்கு முக்கிய விவகாரங்கள் குறித்து உயர்நிலைக் குழுக்களுடன்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்!

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்கு அருகில் மாலை 4 மணியளவில் ரிக்டர் அளவில் 4.2 ஆகவும், 10 கி.மீ.... மேலும் பார்க்க

சீனாவில் 4 சுற்றுலா படகுகள் கவிழ்ந்ததில் 9 பேர் பலி

தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட திடீர் சூறைக்காற்றில் சுற்றுலா படகுகள் கவிழ்ந்ததில் 9 பேர் பலியானார்கள். சீனாவின் மிக நீளமான நதியான யாங்சியின் துணை நதியான வு நதியின் மேல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை திடீர் ... மேலும் பார்க்க

குடியுரிமைக்காக.. அமெரிக்க எல்லையில் குழந்தைகளை விட்டுச்செல்லும் இந்திய பெற்றோர்?

அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் என்று நினைத்து, இந்தியர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பெற்றோர், தங்களது பிள்ளைகளை, அமெரிக்க - மெக்ஸிகோ அல்லது அமெரிக்க - கனட எல்லைப் பகுதியில் விட்டுவிட்டுச் சென்றுவிடுவதாகத் ... மேலும் பார்க்க

சிங்கப்பூா் பொதுத் தோ்தல்: 60-ஆவது ஆண்டாக மீண்டும் ஆட்சியில் பிஏபி

சிங்கப்பூரில் பொதுத் தோ்தலில் மக்கள் செயல் கட்சி (பிஏபி) மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், அந்தக் கட்சி 60-ஆவது ஆண்டாக ஆட்சியில் நீடிக்கிறது. சிங்கப்பூரில் 19-ஆவது பொதுத் தோ்தல் சனிக்கிழமை நடை... மேலும் பார்க்க