செய்திகள் :

வெளிநாட்டு பயணம்: விடியோ வெளியிட்டு முதல்வர் விளக்கம்

post image

மக்களுடன் ஸ்டாலின் செயலியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் விடியோ வெளியிட்டுள்ளார்.

விடியோவில் அவர் தெரிவித்ததாவது,

கேள்வி: தொழில் முதலீட்டாளர்களிடம் தமிழ்நாடு குறித்த பார்வை எவ்வாறு உள்ளது?

முதல்வர் பதில்: தமிழ்நாட்டில் கட்டமைப்பு, படித்த இளைஞர்கள், திறன் மேம்பாடு குறித்து ஜெர்மனி மாநாட்டில் வியந்தனர்.

ஜெர்மனியில் எனக்கு அவர்கள் கொடுத்த பாதுகாப்பின் மூலமே, தமிழ்நாட்டின் மீது அவர்கள் மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. இந்தியாவிலேயே அதிகளவில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்திருப்பதைப் பெருமையாகச் சொன்னார்கள்.

அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து துறைகளிலும் பரவலான வளர்ச்சியைக் கொண்டுசெல்வதிலும், புதிதாக வளர்ந்துவரும் துறைகளின் மீதான கவனம் குறித்து அவர்கள் பாராட்டிப் பேசினர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் முதலீடு செய்ய ஆர்வமாய் இருக்கிறார்கள். இந்த மாற்றத்தையும் வளர்ச்சியையும் அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறேன்.

கேள்வி: ஆக்ஸ்போர்டு பயணம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்களின் சந்திப்பு குறித்து..

முதல்வர் பதில்: ஆக்ஸ்போர்டு, ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் பழைமையான பல்கலைக் கழகம். பல்வேறு நாடுகளில் இருந்து வந்த பேராசிரியர்கள், மாணவர்கள் முன்பு பெரியாரின் சிலையைத் திறந்துவைத்து பேசியபோது மெய்சிலிர்த்தது.

ஜெர்மனியில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைச் சந்தித்தபோது, இடஒதுக்கீட்டில் படித்து, முன்னேறிதான் வெளிநாடு வந்தததாகக் கூறினர். என் குடும்பத்தில் நான்தான் முதல் தலைமுறை பட்டதாரி. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டணத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி ரத்து செய்ததுதான், இந்தளவுக்கு முன்னேறியதற்குக் காரணம்.

அரசுப் பள்ளியில் படித்து, தற்போது லண்டனில் உயர்கல்வியில் படிப்பவர்கள், திமுக அரசின் ஸ்காலர்ஷிப்பால்தான் இங்கு வந்ததாகவும் கூறினர். இந்த மாதிரியான பல மறக்க முடியாத அனுபவங்கள் கொண்டதாகத்தான் ஐரோப்பிய பயணம் அமைந்தது.

அங்குள்ள மக்கள், பொது இடங்களில் எந்தளவுக்கு தன்னொழுக்கத்துடன் இருக்கிறார்கள் என்பதைக் கண்டேன். அதே பொறுப்புணர்ச்சி இங்கும் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

உங்கள் அப்பா ஊரில் அடிப்படை வசதிகூட இல்லை: திருவாரூரில் விஜய்

திருவாரூருக்கு அடிப்படை வசதிகள்கூட இல்லை என்று தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.திருவாரூரில் பிரசாரம் மேற்கொண்டுள்ள தவெக தலைவர் விஜய் பேசுகையில்,``திருவாரூர் தேர் என்றால் சும்மாவா? ரொம்ப நாளாக... மேலும் பார்க்க

தமிழகம் 11.19% பொருளாதார வளர்ச்சி: முதல்வர் ஸ்டாலின் விடியோ வெளியிட்டு பெருமிதம்!

தமிழகம் 11.19 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை எட்டியிருப்பதாக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று(செப். 20) வெளியிட்டுள்ளதொரு விடியோவில் தெரிவித்திருக்கிறார். பல்வேறு தரப்பிலிருந்தும் தன்னிடம் கேட்கப்பட்ட கேள... மேலும் பார்க்க

கருவலூரில் கட்டுமானப் பணியில் கட்டடம் இடிந்து இருவர் உயிரிழப்பு

அவிநாசி அருகே கருவலூர் உப்பிலிபாளையத்தில் கட்டுமானப் பணியின் போது கட்டடம் இடிந்து விழுந்ததில், இரு கட்டட தொழிலாளர்கள் சனிக்கிழமை உயிரிழந்தனர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், கருவலூர் அருகே உப்பில... மேலும் பார்க்க

சென்னை உள்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று(சனிக்கிழமை) அடுத்த 3 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை,... மேலும் பார்க்க

எழுதிக் கொடுத்ததைப் பேசுகிறார்: விஜய்க்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!

நாகூர் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் மறுப்பு தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரத்தில் நலம்காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் பங்கேற்ற அமைச்சர் மா... மேலும் பார்க்க

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று(செப். 20) தொடக்கி வைத்தார்.பயிற்சியைத் தொடங்கி வைத்த அவர் பயிற்சி நூலை வெளியிட்டதுடன் ... மேலும் பார்க்க