செய்திகள் :

வெளியூர் போட்டிகளில் மட்டும் நன்றாக விளையாடுகிறேனா? ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

post image

பஞ்சாப் அணியின் கேப்டனும் ஆட்ட நாயகன் விருது வென்றவருமான ஷ்ரேயாஸ் ஐயர் எந்தத் திடலிலும் சேஸிங் செய்வது பிடிக்கும் எனக் கூறியுள்ளார்.

சேப்பாக்கில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் 19.4ஆவது ஓவரில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே 190க்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய பஞ்சாப் அணியில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார்.

இறுதியில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்ட நாயகன் விருதும் பெற்றார். இது குறித்து போட்டிக்குப் பிறகு அவர் கூறியதாவது:

எங்கு விளையாடினாலும் சேஸிங் பிடிக்கும்

எந்தத் திடலிலும் எனக்கு சேஸிங் செய்வதென்றால் பிடிக்கும். மிகப்பெரிய ரன்கள் இலக்காக இருக்கும்போது எனக்கு வெற்றியடைய வேண்டுமென்ற எண்ணம் கூடுதலாக இருக்கிறது.

அணிக்காக பொறுப்பேற்பது பிடிக்கும். நான் ஒரு புறம் பொறுமையாக ஆடும்போது மறுபுறத்தில் மற்றவர்கள் அதிரடியாக விளையாடலாம்.

வெளியூர்களில் மட்டுமே நன்றாக விளையாடுகிறேன் என்ற விஷயத்தில் என்ன சொல்லுவது? நான் அதில் சாபம் விட விரும்பவில்லை. நிகழ்காலத்தில் இருந்து பந்திக்கு ஏற்றபடி விளையாட வேண்டும்.

தன்னம்பிக்கை அளித்த பயிற்சி

நான் எங்கு விளையாடுகிறேன் என்பது முக்கியமில்லை. என்னுடைய பாணியில் விளையாடுகிறேன். சில நேரங்களில் அது வேலை செய்கிறது, சில நேரங்களில் செய்வதில்லை.

வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நான் அதிகமாக பயிற்சி எடுத்தேன். அது எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தது.

குறிப்பாக புதிய பந்தில் பயிற்சி எடுத்ததால் எனக்கு மிகுந்த தன்னம்பிக்கை கிடைத்தது. இதைதான் நான் மிகவும் கடினமான பயிற்சி செய்து பெற்றேன்.

ஃபீல்டிங்கில் செல்லும்போது நான் எப்போதும் எனது குணாதியத்தை உயர்வாக வைத்திருக்க விரும்புகிறேன். சிறிய சிறிய கட்டங்களை நிரப்பினாலே போதுமானதென நினைக்கிறேன் என்றார்.

50-வது போட்டி: மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் இன்று நடைபெறும் 50-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்று... மேலும் பார்க்க

ஐபிஎல் ரோபோ நாய்க்கு காப்புரிமை கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

ஐபிஎல் ரோபோ நாய்க்கு காப்புரிமை கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.நடப்பு ஐபிஎல் தொடர் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல்லில் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெற்... மேலும் பார்க்க

சிஎஸ்கேவுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எப்படி சாத்தியமானது? ரகசியம் பகிர்ந்த சஹால்!

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தது குறித்து பஞ்சாப் கிங்ஸ் வீரர் யுஸ்வேந்திர சஹால் மனம் திறந்துள்ளார்.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற நேற்றையப் ப... மேலும் பார்க்க

பதிரானா பந்துவீச்சில் புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும்: சிஎஸ்கே பயிற்சியாளர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா அவரது பந்துவீச்சில் புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும் என சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சிளார் எரிக் சிமன்ஸ் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொ... மேலும் பார்க்க

ஆட்டத்தின் சூழல்களை நன்றாக புரிந்துகொள்ளும் ஷ்ரேயாஸ் ஐயர்; ரிக்கி பாண்டிங் பாராட்டு!

ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் முதிர்ச்சியடைந்த வீரராக மாறிவிட்டதாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் ... மேலும் பார்க்க

தோனி யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை: ஆடம் கில்கிறிஸ்ட்

சிஎஸ்கே கேப்டன் தோனி குறித்து முன்னாள் ஆஸி. வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் அவர் யாருக்கும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை எனக் கூறியுள்ளார். தோனி கடைசியாக 2023இல் கேப்டனாக இருக்கும்போது சிஎஸ்கே அணி தனது 5-ஆவத... மேலும் பார்க்க