செய்திகள் :

ஐபிஎல் ரோபோ நாய்க்கு காப்புரிமை கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

post image

ஐபிஎல் ரோபோ நாய்க்கு காப்புரிமை கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடர் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல்லில் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெற்ற போட்டியின் போது புதிய ரோபா நாய் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

ரோபோ நாய்

இந்த நாய் ரோபோ, வீரர்கள் செய்யும் சைகைகளை செய்து அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குவது மட்டுமின்றி, அவர்கள் எதிர்பாராத அசைவுகளையும் செய்து ஆச்சரியப்படுத்துகிறது.

கிரிக்கெட் திடல் முழுவதும் வலம் வரும் இந்த இயந்திர நாயின் முகத்திலும் முதுகிலும் கேமரா பொருத்தப்பட்டிருப்பதால், வீரர்களின் செயல்பாடுகள் நாயின் பார்வையிலும் விடியோ பதிவு செய்யப்படுகிறது. வீரர்கள் பேசிக்கொண்டும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டும் இருக்கும் இடங்களுக்குச் செல்லும் இயந்திர நாய், அதனையும் படம் பிடிக்கிறது.

இந்த நாய்க்கு சார்ஜ் ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை. தானகவே சார்ஜ் செய்து கொள்ளும் வகையில் இந்த ரோபோ நாய் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நாய்க்கு வடிவிலான இயந்திரத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என ரசிகர்களிடம் ஐபிஎல் கேட்ட நிலையில், இந்த நாய்க்கு சம்பக் எனப் பெயரிட ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த நிலையில், இதுதொடர்பாக சம்பக் என்ற குழந்தைகளுக்கான 9 மொழிகளில் செயல்பட்டுவரும் இதழ் வெளியிட்டு நிறுவனம் பிசிசிஐ மீது காப்புரிமை கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

தில்லி உயர் நீதிமன்றத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வழக்குரைஞர் ஜேசாய் தீபக் கூறும்போது, “சாம்பக் என்ற பெயருக்கும் குழந்தைகள் பத்திரிகைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதற்கு பதிலாக, பிரபல தொலைக்காட்சி தொடரான ‘தாரக் மேத்தா கா ஊல்தா சாஷ்மாவில் வரும் கதாபாத்திரமான சம்பக் லால் பெயர் ரோபோ நாய்க்கு வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த உயர் நீதிமன்ற நீதிபதி, “இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு 'சீக்கு' என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இதற்கு குழந்தைகள் இதழ் நிறுவனம் ஏன் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை” என்று கேள்வி எழுப்பியிருக்கிறது. இந்த இதழில் சீக்கு என்ற பெயரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பதிரானா பந்துவீச்சில் புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும்: சிஎஸ்கே பயிற்சியாளர்

அரைசதம் விளாசிய ரோஹித், ரிக்கல்டான்; ராஜஸ்தானுக்கு 218 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 2 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல... மேலும் பார்க்க

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில் விளையாடுவாரா?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நாளை (மே 2) நடைபெறும் போட்டியில் குஜராத... மேலும் பார்க்க

50-வது போட்டி: மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் இன்று நடைபெறும் 50-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்று... மேலும் பார்க்க

சிஎஸ்கேவுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எப்படி சாத்தியமானது? ரகசியம் பகிர்ந்த சஹால்!

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தது குறித்து பஞ்சாப் கிங்ஸ் வீரர் யுஸ்வேந்திர சஹால் மனம் திறந்துள்ளார்.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற நேற்றையப் ப... மேலும் பார்க்க

பதிரானா பந்துவீச்சில் புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும்: சிஎஸ்கே பயிற்சியாளர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா அவரது பந்துவீச்சில் புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும் என சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சிளார் எரிக் சிமன்ஸ் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொ... மேலும் பார்க்க

ஆட்டத்தின் சூழல்களை நன்றாக புரிந்துகொள்ளும் ஷ்ரேயாஸ் ஐயர்; ரிக்கி பாண்டிங் பாராட்டு!

ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் முதிர்ச்சியடைந்த வீரராக மாறிவிட்டதாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் ... மேலும் பார்க்க