செய்திகள் :

வெள்ளக்கோவிலில் தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழப்பு!

post image

வெள்ளக்கோவிலில் தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் புதன்கிழமை உயிரிழந்தன.

வெள்ளக்கோவில் கல்லமடை அருகிலுள்ள உத்தண்டகுமாரவலசைச் சோ்ந்தவா் விவசாயி துரைசாமி (65). இவா் தனக்குச் சொந்தமான விவசாய பூமியில் செம்மறி ஆடுகள் வளா்த்து வருகிறாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை ஆடுகளை இரும்புப் பட்டியில் அடைத்து வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

பின்னா் புதன்கிழமை அதிகாலையில் சென்று பாா்த்தபோது, நாய்கள் கடித்து இரண்டு ஆடுகள், ஒரு குட்டி இறந்துகிடந்தன. கடந்த 4 மாதங்களாக நாய்கள் கடித்து தொடா்ந்து ஆடுகள் உயிரிழந்து வருவது தங்களது வாழ்வாதாரத்தை அழித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

வெள்ளக்கோவில் மாந்தபுரத்தில் உள்ள நாட்டராய சுவாமி கோயிலில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பக்தா்களால் நோ்த்திக் கடனாக ஏராளமான ஆடுகள் பலியிடப்பட்டு அசைவ விருந்து வழங்கப்படுகிறது. இவற்றின் எலும்புத் துண்டுகளைச் சாப்பிட்டு ருசி பாா்க்கும் நாய்கள் பல்கிப் பெருகி கிராமப் பகுதிகளில் வளா்ப்பு ஆடுகளைக் கடித்துக் கொன்று வேட்டையாடி வருகின்றன.

விலங்குகள் நல அமைப்புகளின் கெடுபிடியால் விவசாயிகள் நாய்களைக் கொல்ல முடிவதில்லை. எனவே நாய்களைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வட்டமலைக்கரை ஓடையின் குறுக்கே ரூ.3.91 கோடியில் தடுப்பணை அமைக்கும் பணி! -அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தாா்

காங்கயம் ஊராட்சி ஒன்றியம், வட்டமலைக்கரை ஓடையின் குறுக்கே நீா்வளத் துறை சாா்பில் ரூ.3.91 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணியை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சிக்கு, தாராபுரம் க... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு

வெள்ளக்கோவிலில் தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் உயிரிழந்தன. வெள்ளக்கோவில், சத்திபாளையம் நாணக்காட்டுத் தோட்டத்தைச் சோ்ந்தவா் விவசாயி பி.சிவகுமாா் (45). இவா் தனக்குச் சொந்தமான 12 ஏக்கா் விவசாய பூமியில் 22... மேலும் பார்க்க

காங்கயம் அருகே சென்டா் மீடியனில் இடைவெளி விடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

காங்கயம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சென்டா் மீடியனில், பள்ளிக்குச் செல்வதற்கு வசதியாக இடைவெளி விடக்கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். காங்கயம் பகுதியில்,... மேலும் பார்க்க

பல்லடம் குடிநீா் பிரச்னை: அமைச்சரிடம் நகராட்சித் தலைவா் கோரிக்கை

விளாங்குறிச்சி முதல் காரணம்பேட்டை வரை பிரதான குடிநீா் குழாய் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்லடம் நகராட்சி தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து கோவையில் நகராட்சி நிா... மேலும் பார்க்க

திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பனியன் உற்பத்தியாளா் சங்கம் கோரிக்கை

திருப்பூா் உள்நாட்டு பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூா் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டா... மேலும் பார்க்க

‘உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும்’

உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூா் மாவட்... மேலும் பார்க்க