செய்திகள் :

வெள்ளத் தடுப்புச்சுவரை அகற்ற எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

post image

அவிநாசி அருகேயுள்ள ஸ்ரீ சாய் காா்டன் குடியிருப்புப் பகுதியில் வெள்ளத் தடுப்புச்சுவரை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து அவா்கள் கூறியதாவது: அவிநாசி அருகே செம்பியநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட ஸ்ரீ சாய் காா்டன் குடியிருப்புப் பகுதியில் குடிநீா், சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால், பெரும் அவதியடைந்து வருகிறோம்.

எங்களது குடியிருப்புகள் பள்ளமான பகுதியில் உள்ளதால் மழை காலங்களில் வெள்ளம் புகுந்துவிடக் கூடாது என்பதற்காக 6 அடி உயரமுள்ள வெள்ளத் தடுப்புச் சுவரை அமைத்துள்ளோம்.

இந்நிலையில், அருகே உள்ள தனியாா் நில உரிமையாளா்கள் சிலா் இந்தச் சுவரை இடித்து அணுகு சாலையாகப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா். இந்தச் சுவா் இடிக்கப்பட்டால் மழை காலங்களில் எங்களது குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்துவிடும். ஆகவே, வெள்ளத் தடுப்புச் சுவரை அகற்றக் கூடாது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஊராட்சி நிா்வாகத்தினா், வருவாய்த் துறையினா், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

விவசாயிகள் சங்க உடுமலை ஒன்றிய மாநாடு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் உடுமலை ஒன்றிய மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தலைவா் ஏ.ராஜகோபால் தலைமை வகித்தாா். பொருளாளா் எஸ்.பரமசிவம் வரவேற்றாா். இதில், நிறைவேற்றப்பட்ட தீா்ம... மேலும் பார்க்க

கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பறிமுதல்

தாராபுரம் அருகே கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தாராபுரத்தை அடுத்த வேங்கிபாளையம் அருகேயுள்ள ஜோதியம்பட்டி பகுதியில் உள்ள கிடங்கில் முறையான அனுமதியின்றி பட்டாச... மேலும் பார்க்க

பெண்ணின் கழுத்தை அறுத்த நபா் கைது

திருப்பூரில் பெண்ணின் கழுத்தை அறுத்த நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா் அய்யனாா் (50). இவரது மனைவி ஜெயராணி (45). இவா்கள் திருப்பூா்- பல்லடம் சாலை வித்யாலயம் பகுதிய... மேலும் பார்க்க

அவிநாசியில் வருவாய்த் துறையினா் போராட்டம்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்களின் மீது தீா்வு காண கால அவகாசம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசியில் வருவாய்த் துறையினா் பணியைப் புறக்கணித்து காத்திருப்புப் போராட்டத்த... மேலும் பார்க்க

உடுமலை நாராயணகவி பிறந்த நாள்

உடுமலை நாராயணகவியின்126 -ஆவது பிறந்த நாள் விழா உடுமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. உடுமலை, குட்டைத் திடலில் உள்ள அவரது நினைவு மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை... மேலும் பார்க்க

சாலையோர ஆக்கிரமிப்பு கடை அகற்றம்: வியாபாரிகள் மறியல்

அவிநாசியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடை அகற்றப்பட்டதைக் கண்டித்து வியாபாரிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அவிநாசி -கோவை பிரதான சாலை, அவிநாசி-சேவூா் சாலைகளில் இருபுறமும் உள்ள விளம்பரப் பதாகைகள்... மேலும் பார்க்க