செய்திகள் :

வெள்ளை மாளிகையில் டிரம்ப்பை சந்தித்தார் மோடி!

post image

அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப்பை புதன்கிழமை (உள்ளூர் நேரப்படி) நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தக உறவு, வரி விதிப்பு உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து இரண்டு நாள் பயணமான பிப். 12-ஆம் தேதி அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை காலை தொழிலதிபர் எலான் மஸ்க், மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடியை கட்டியணைத்து டிரம்ப் வரவேற்றார்.

இதையும் படிக்க : எலான் மஸ்குடன் பிரதமா் மோடி சந்திப்பு: தொழில்நுட்பம், நிா்வாகம் குறித்து ஆலோசனை

டிரம்ப்புடனான சந்திப்பு குறித்து மோடி தெரிவித்ததாவது:

"சிறப்பான வரவேற்பு அளித்த அதிபர் டிரம்ப்புக்கு நன்றி. உக்ரைன் போர் விவகாரத்தில் அமைதியை மீட்டெடுக்க டிரம்ப் முயற்சிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவோம் (மேக் அமெரிக்கா கிரேட் எகைன் - MAGA) என்ற டிரம்ப் தெரிவித்திருக்கிறார். இதேபோல இந்தியாவை சிறந்த நாடாக்கும் வளர்ந்த இந்தியாவை நோக்கி நாமும் பயணித்துக் கொண்டுள்ளோம். அமெரிக்க மொழியில் மேக் இந்தியா கிரேட் எகைன் (MIGA).

இரண்டு ஜனநாயாக சக்தியையும் ஒன்றிணைந்து மெகா (MEGA) கூட்டணியை உருவாக்கி செழிப்பான நாடாக உருவாக்குவோம்” எனத் தெரிவித்தார்.

பூடான் பெட்ரோல் விலை: இந்தியாவிலிருந்து சுற்றுலா சென்றவருக்கு அதிர்ச்சி!

இந்தியாவிலேயே சில மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100க்கும் கீழ் இருந்துகொண்டிருந்தாலும், பூடானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலைதான் இன்றைய ஹாட் டாப்பிக்.பிகார், மேற்கு வங்கம், ஒடிசா, மத்தியப் பிரதேச... மேலும் பார்க்க

அதென்ன 'ஒய்' பிரிவு பாதுகாப்பு?

இந்தியாவில், குடியரசுத் தலைவர் தொடங்கி, நாட்டின் மிக முக்கிய பதவியை வகிப்பவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலருக்கும் பல வகையான பாதுகாப்புகள் வழங்கப்படுகின்றன.ஒருவருக்கு எந்தவிதம... மேலும் பார்க்க

அதானி குழும லாரியால் இருவர் பலி! 8 வாகனங்களை எரித்து கலவரம்!

மத்தியப் பிரதேசத்தில் கனரக லாரி மோதிய விபத்தில் இருவர் பலியாகினர்.மத்தியப் பிரதேசத்தில் சிங்ரௌலி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராம்லல்லு யாதவ், ராம் சாகர் பிரஜாபதி இருவர் மீதும் ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கியது!

நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் தொடங்கின. நாடு முழுவதும... மேலும் பார்க்க

புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய சிறப்புக் குழு நியமனம்!

புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட சிறப்புக் குழுவை மக்களவைத் தலைவர் நியமித்துள்ளார்.மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை தாக்கல் செய்தார். ... மேலும் பார்க்க

அமெரிக்க விமானங்கள் அமிருதசரஸ் வருவது ஏன்? பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

அமிருதசரஸ்: நாடு கடத்தும் இந்தியர்களுடன், அமெரிக்க விமானங்கள் அமிருதசரஸ் வருவது ஏன் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை நாடு ... மேலும் பார்க்க