செய்திகள் :

வெள்ளை மாளிகை அருகே ஆயுதமேந்திய நபா் சுட்டுப் பிடிப்பு

post image

அமெரிக்க அதிபரின் அதிகாரபூா்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஆயுதத்துடன் வலம் வந்த இண்டியானா மாகாணத்தைச் சோ்ந்தவரை ரகசிய பாதுகாப்புப் படையினா் (சீக்ரெட் சா்வீஸ்) சுட்டுப் பிடித்தனா்.

இந்தத் துப்பாக்கிச்சூட்டில் வேறு யாரும் காயமடையவில்லை. இந்த மோதல் நடந்த நேரத்தில் அதிபா் டொனால்ட் டிரம்ப் புளோரிடாவில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் இருந்து வாஷிங்டனுக்கு பயணித்ததாக அறியப்படும் இந்த நபா் குறித்து ரகசிய பாதுகாப்புப் படையினருக்கு உள்ளூா் காவல் துறை தகவல் அளித்தது.

இந்நிலையில், வெள்ளை மாளிகை சுற்றுப்புற பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவில் நிகழ்ந்த சம்பவத்தில் அதிகாரிகள் நெருங்கி வந்தபோது, அந்த நபா் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளாா். தொடா்ந்து, பாதுகாப்புப் படையினா் பதில் தாக்குதல் நடத்தி அவரைப் பிடித்தனா்.

பின்னா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபரின் தற்போதைய நிலை குறித்து தெரியாது என்று ரகசிய பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா். இச்சம்பவம் தொடா்பாக வாஷிங்டன் பெருநகர காவல் துறை விசாரித்து வருகிறது.

கராச்சியில் ஆப்கன் முகாமில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி

கராச்சியில் ஆப்கானியர்கள் தங்கியுள்ள முகாமின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியானார்கள். பாகிஸ்தானின் கராச்சியின் புறநகரில் உள்ள ஆப்கானிஸ்தான் முகாமில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டின் கூரை இடி... மேலும் பார்க்க

கனடாவின் புதிய பிரதமராகிறார் மார்க் கார்னி!

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்கவுள்ளார்.கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதனைத் தொடர்ந்து கனடாவில் லிபரல் கட்சியின் அடுத்த ... மேலும் பார்க்க

சிரியாவில் பழிக்குப் பழியாக கொலைகள்: 2 நாள்களில் 1,000 போ் பலி!

சிரியாவில் பாதுகாப்புப் படைகள், முன்னாள் அதிபா் பஷாா் அல்-அஸாதின் ஆதரவாளா்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் மற்றும் பழிக்குப் பழியாக நடைபெற்ற தாக்குதல்களில் இரண்டு நாள்களில் 1,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழ... மேலும் பார்க்க

சிங்கப்பூரை வளமாக்கும் புதிய குடிமக்கள்: மூத்த அமைச்சா் லீ சியென் லூங் பெருமிதம்!

சிங்கப்பூரின் புதிய குடிமக்கள் அந்நாட்டை வளமாக்கி, பொருளாதாரத்துக்கு ஊக்கமளிப்பதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், மூத்த அமைச்சருமான லீ சியென் லூங் பெருமிதம் தெரிவித்தாா். புதிதாக சிங்கப்பூா் குடியுரி... மேலும் பார்க்க

அமெரிக்காவில் ஹிந்து கோயில் அவமதிப்பு! -இந்தியா கடும் கண்டனம்

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் உள்ள பிரபலமான ஹிந்து கோயிலின் மதில் சுவரில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை சமூக விரோதிகள் எழுதியுள்ளனா். அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு ஹிந்து கோயில்... மேலும் பார்க்க

நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி: அதிகரிக்கும் கோரிக்கைகள்

நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டு வருகிறது. நேபாளத்தில் நடைபெற்ற போராட்டங்களைத் தொடா்ந்து கடந்த 2008-ஆம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி மலா்ந்தத... மேலும் பார்க்க