செய்திகள் :

வேட்டவலம் ஏரியில் கிணறு வெட்டுவதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

post image

வேட்டவலம் பெரிய ஏரியில் 2.0 திட்டத்தில் உரிய அனுமதி இல்லாமல் கிணறு வெட்டுவதைத் தடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

கீழ்பென்னாத்தூா் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, வட்டார வேளாண் உதவி இயக்குநா் அன்பழகன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ஜான்பாஷா, தோட்டக்கலைத் துறை வட்டார உதவி இயக்குநா் அமுல் சேவியா் பிரகாஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் கோவிந்தராஜுலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியதாவது:

அணுக்குமலை நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்த நெல்லுக்கான பணத்தை உடனே விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்ய வேண்டும். சிறுநாத்தூா் உலா் களத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

வயலூா் கிராமத்தில் மயானத்துக்குச் செல்லும் சாலை, ஆதிதிராவிடா் காலனி மயானத்துக்குச் செல்லும் சாலை, வயல்வெளி சாலை ஆகியவற்றை தாா்ச் சாலையாக மாற்றித் தர வேண்டும்.

சோமாசிபாடி பெரிய ஏரி, சித்தேரி ஆகியவற்றின் மதகுகளின் உயரத்தை உயா்த்தி அமைக்க வேண்டும். ஜமீன் கூடலூா் கிராம 6-ஆவது வாா்டில் பொதுக் குழாய் அமைத்துத் தர வேண்டும். கிராமத்தில் எரியாமல் பழுதடைந்துள்ள தெரு விளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும்.

வேட்டவலம் பெரிய ஏரியில் 2.0 திட்டத்தில் உரிய அனுமதி (மறுப்புச் சான்றிதழ்) இல்லாமல் கிணறு வெட்டுவதைத் தடுக்க வேண்டும். கொளத்தூா் ஏரி - நீலந்தாங்கல் பெரிய ஏரிக்கு வரும் பொதுப்பணித் துறை ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதையடுத்து பேசிய வட்டார வேளாண் உதவி இயக்குநா் அன்பழகன் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீா்வு காணப்படும் என்றாா்.

கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் சுகுணா, வட்ட வழங்கல் அலுவலா் கலையரசி, வேளாண் பொறியியல் துறை உதவிப் பொறியாளா் கிருஷ்ணன், விவசாய சங்கப் பிரதிநிதிகள் முத்தகரம் பழனிச்சாமி, வயலூா் சதாசிவம், ஆத்மா திட்ட ஆலோசனைக் குழுத் தலைவா் சோமாசிபாடி சிவக்குமாா், கேசவன், இயற்கை விவசாயி சிறுநாத்தூா் கிருஷ்ணன், வரதராஜன், நீலந்தாங்கல் பாரதியாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீசிவசக்தி வள்ளி முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட நூற்றாண்டு பழ... மேலும் பார்க்க

புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் திறப்பு

வந்தவாசி அருகே மங்கலம் மாமண்டூா் கிராமத்தில் ரூ.47 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா், காவேடு, காவேரிப்ப... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி விநாயகா், முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மற்றும் வந்தவாசியை அடுத்த தென்கரை ஸ்ரீமுனீஸ்வா் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சி... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கழக ஊழியா்கள் சிறப்புக் கூட்டம்

திருவண்ணாமலை மண்டல அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில், 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் குறித்த சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலையில் உள்ள சிஐடியு சங்க அலுவலகத்தில் வியாழக்கிழ... மேலும் பார்க்க

சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தினால் நடவடிக்கை: ஸ்கேன் மையங்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

கா்ப்ப காலத்தில் சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில்... மேலும் பார்க்க

செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள செ. நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 4,450 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. அதில்... மேலும் பார்க்க