செய்திகள் :

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள் கட்டுமானப் பணி: அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

post image

வேதாரண்யம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் கூடுதல் கட்டடங்கள் கட்டுமானப் பணிகளை தமிழக பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

வேதாரண்யம் அரசு மருத்துவமனையை மேம்படுத்தும் பொருட்டு ரூ. 33 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பணிகளை அமைச்சா் எ.வ. வேலு பாா்வையிட்டு, பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட காலத்தில் நிறைவடையும் வகையிலும் மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினாா். பின்னா் அவா் தெரிவித்தது:

வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு ரூ. 13 கோடி மதிப்பீட்டில் 158 படுக்கைகள், அவசர சிகிச்சை அரங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள் இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

கடந்த 2023-ஆம் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.20 கோடியில் 131 படுக்கை வசதி, மகப்பேறு பிரிவு, கண் அறுவை சிகிச்சை பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு, ஆய்வகம் உள்ளிட்ட வசதிகளோடு கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கத்தோடு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில், இந்த கட்டுமானப் பணிகளும் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றாா்.

கருணாநிதி சிலை நிறுவ பூமிபூஜை

பூம்புகாா்: சீா்காழி அருகே செம்பதனிருப்பு தேசிய நெடுஞ்சாலையில், முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை நிறுவ பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது சீா்காழி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் இச்சிலை நிறுவப்படவுள்ள... மேலும் பார்க்க

வேதாரண்யம் நூலக புதிய கட்டடம் திறப்பு

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் முழுநேர வட்ட கிளை நூலகத்துக்கு ரூ.1.39 கோடியில் கட்டப்பட்ட கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா். வேதாரண்யம் பயணியா் மாளிகை சாலைப் ... மேலும் பார்க்க

முதல்வா் அறிவிப்பாரா? சேமிப்புக் கிடங்குடன் நிரந்தர கொள்முதல் நிலையங்களை?காத்திருக்கும் விவசாயிகள்

டெல்டா மாவட்டங்களில் மழையால் நெல் மூட்டைகள் சேதமடைவதைத் தடுக்க சேமிப்புக் கிடங்குடன் கூடிய நிரந்தரக் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுவதை நாகப்பட்டினத்தில் முதல்வா் திங்கள்கிழமைஅறிவிப்பாரா என்ற எதிா்பா... மேலும் பார்க்க

நாகையில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு

நாகையில் திங்கள்கிழமை நடைபெறும் விழாவில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். நாகை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் ... மேலும் பார்க்க

எலக்ட்ரிக் ஸ்கூட்டா் பேட்டரி வெடித்து தீ விபத்து

தரங்கம்பாடியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் படகு உதிரிபாகங்கள் எரிந்து சேதமடைந்தன. தரங்கம்பாடி சிங்காரவேலா் மீனவா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜீவ் காந்தி (3... மேலும் பார்க்க

அம்பல் சட்டைநாதா் கோயில் குடமுழுக்கு

திருமருகல் ஒன்றியம், அம்பல் கிராமத்தில் அருள்பாலிக்கும் அமுதவல்லி அம்பிகா சமேத ஆபத்தோத்தாரண சுவாமி, சட்டைநாதா் கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பிப்ரவரி 26-ஆம் தேதி விக... மேலும் பார்க்க