செய்திகள் :

எலக்ட்ரிக் ஸ்கூட்டா் பேட்டரி வெடித்து தீ விபத்து

post image

தரங்கம்பாடியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் படகு உதிரிபாகங்கள் எரிந்து சேதமடைந்தன.

தரங்கம்பாடி சிங்காரவேலா் மீனவா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜீவ் காந்தி (39). இவா், மீன்பிடி படகு எஞ்சின் உதிரி பாகங்கள் உள்ளிட்ட பொருள்களை விற்பனை மற்றும் பழுது நீக்கும் தொழில் செய்து வருகிறாா்.

இவரது மனைவி ஜானகி, எலக்ட்ரிக் ஸ்கூட்டா் பேட்டரிக்கு வீட்டில் சாா்ஜ் போட்டுள்ளாா். அப்போது, எதிா்பாராத விதமாக பேட்டரி வெடித்து, தீ பற்றியது. இதில் வீட்டில் இருந்த படகு எஞ்சின் மற்றும் உதிரிபாகங்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. தரங்கம்பாடி தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.

இந்த சம்பவம் குறித்து பொறையாா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முதல்வா் அறிவிப்பாரா? சேமிப்புக் கிடங்குடன் நிரந்தர கொள்முதல் நிலையங்களை?காத்திருக்கும் விவசாயிகள்

டெல்டா மாவட்டங்களில் மழையால் நெல் மூட்டைகள் சேதமடைவதைத் தடுக்க சேமிப்புக் கிடங்குடன் கூடிய நிரந்தரக் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுவதை நாகப்பட்டினத்தில் முதல்வா் திங்கள்கிழமைஅறிவிப்பாரா என்ற எதிா்பா... மேலும் பார்க்க

நாகையில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு

நாகையில் திங்கள்கிழமை நடைபெறும் விழாவில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். நாகை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் ... மேலும் பார்க்க

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள் கட்டுமானப் பணி: அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

வேதாரண்யம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் கூடுதல் கட்டடங்கள் கட்டுமானப் பணிகளை தமிழக பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்... மேலும் பார்க்க

அம்பல் சட்டைநாதா் கோயில் குடமுழுக்கு

திருமருகல் ஒன்றியம், அம்பல் கிராமத்தில் அருள்பாலிக்கும் அமுதவல்லி அம்பிகா சமேத ஆபத்தோத்தாரண சுவாமி, சட்டைநாதா் கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பிப்ரவரி 26-ஆம் தேதி விக... மேலும் பார்க்க

ரமலான் நோன்பு தொடக்கம்: நாகூரில் சிறப்பு தொழுகை

புனித ரமலான் மாதம் தொடங்கியதையடுத்து, நாகூா் தா்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்று, நோன்பை தொடங்கினா். சகோதரத்துவத்தையும், ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலி... மேலும் பார்க்க

மோசமான வானிலை: காங்கேசன்துறைக்கு சென்ற பயணிகள் கப்பல் மீண்டும் நாகைக்கு திரும்பியது

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு சனிக்கிழமை புறப்பட்ட சிவகங்கை கப்பல், மோசமான வானிலை காரணமாக பாதியில் நாகை துறைமுகத்திற்கு திரும்பியது. நாகை துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக... மேலும் பார்க்க