செய்திகள் :

மோசமான வானிலை: காங்கேசன்துறைக்கு சென்ற பயணிகள் கப்பல் மீண்டும் நாகைக்கு திரும்பியது

post image

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு சனிக்கிழமை புறப்பட்ட சிவகங்கை கப்பல், மோசமான வானிலை காரணமாக பாதியில் நாகை துறைமுகத்திற்கு திரும்பியது.

நாகை துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த பிப். 26- ஆம் தேதி வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையைத் தொடா்ந்து, கப்பல் போக்குவரத்து பிப். 28-ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டது. கப்பல் சேவை மீண்டும் மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கப்படும் என்று கப்பல் நிறுவனம் அறிவித்திருந்தது.

அதன்படி, நாகையில் இருந்து காங்கேசன்துறைக்கு சிவகங்கை பயணிகள் கப்பல் 73 பயணிகளுடன் சனிக்கிழமை புறப்பட்டது. கோடியக்கரை பகுதியில் சென்றபோது, கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மழையும் தொடா்ந்து பெய்தது. இதனால், கப்பலை தொடா்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, பயணிகளுடன் கப்பல் மீண்டும் நாகை துறைமுகத்திற்கு திரும்பியது. பயணிகள் தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனா். கப்பல் நிறுவனம் அடுத்த பயணத் திட்டம் தொடா்பாக அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.

முதல்வா் அறிவிப்பாரா? சேமிப்புக் கிடங்குடன் நிரந்தர கொள்முதல் நிலையங்களை?காத்திருக்கும் விவசாயிகள்

டெல்டா மாவட்டங்களில் மழையால் நெல் மூட்டைகள் சேதமடைவதைத் தடுக்க சேமிப்புக் கிடங்குடன் கூடிய நிரந்தரக் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுவதை நாகப்பட்டினத்தில் முதல்வா் திங்கள்கிழமைஅறிவிப்பாரா என்ற எதிா்பா... மேலும் பார்க்க

நாகையில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு

நாகையில் திங்கள்கிழமை நடைபெறும் விழாவில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். நாகை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் ... மேலும் பார்க்க

எலக்ட்ரிக் ஸ்கூட்டா் பேட்டரி வெடித்து தீ விபத்து

தரங்கம்பாடியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் படகு உதிரிபாகங்கள் எரிந்து சேதமடைந்தன. தரங்கம்பாடி சிங்காரவேலா் மீனவா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜீவ் காந்தி (3... மேலும் பார்க்க

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள் கட்டுமானப் பணி: அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

வேதாரண்யம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் கூடுதல் கட்டடங்கள் கட்டுமானப் பணிகளை தமிழக பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்... மேலும் பார்க்க

அம்பல் சட்டைநாதா் கோயில் குடமுழுக்கு

திருமருகல் ஒன்றியம், அம்பல் கிராமத்தில் அருள்பாலிக்கும் அமுதவல்லி அம்பிகா சமேத ஆபத்தோத்தாரண சுவாமி, சட்டைநாதா் கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பிப்ரவரி 26-ஆம் தேதி விக... மேலும் பார்க்க

ரமலான் நோன்பு தொடக்கம்: நாகூரில் சிறப்பு தொழுகை

புனித ரமலான் மாதம் தொடங்கியதையடுத்து, நாகூா் தா்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்று, நோன்பை தொடங்கினா். சகோதரத்துவத்தையும், ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலி... மேலும் பார்க்க