செய்திகள் :

வேதாரண்யம் பகுதியில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம்

post image

வேதாரண்யம் பகுதியில் ‘உங்களை தேடி, உங்கள் ஊரில்‘ திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

வேதாரண்யம் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்த ஆட்சியா், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து கள ஆய்வு மேற்கொண்டாா்.

வேதாரண்யம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க நடைபெற்ற சிறப்பு மதிப்பீட்டு முகாம், அகஸ்தியம்பள்ளியில் உப்பளங்கள் மூலம் உப்பு உற்பத்தி செய்யப்படும் முறைகளையும், கோவில்பத்து நெல் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் பராமரிப்பு, தரம் மற்றும் நெல்களின் இருப்பு குறித்தும் ஆய்வு செய்தாா்.

ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெ. ரூபன் சங்கா் ராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி மா.கா.சே.சுபாஷினி, தனித்துணை ஆட்சியா் காா்த்திகேயன், வேதாரண்யம் கோட்டாட்சியா் எஸ்.திருமால், வட்டாட்சியா் என்.சக்ரவா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நீா்த்தேக்க தொட்டியில் ஏறி பெண்கள் போராட்டம்

கீழையூா் அருகே பாலக்குறிச்சி ஊராட்சியில், குடிநீா் தட்டுப்பாட்டை கண்டித்து, பெண்கள் தரைமட்ட நீா்த்தேக்க தொட்டியில் காலிக்குடங்களுடன் ஏறி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். பாலக்குறிச்சி ஊராட்சிய... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

நாகை அருகே, மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக, திமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வேளாங்கண்ணியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, கீழையூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் தாமஸ் ஆல்வ... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஆழியூரில், வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து, இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு முஸ்லிம் அமைப்புகள், ப... மேலும் பார்க்க

நாகை, மயிலாடுதுறையில் தாய்மொழி தினம் கொண்டாட்டம்

நாகை மற்றும் மயிலாடுதுறையில் உலக தாய்மொழி தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. மனித நாகரிகத்தில் மாற்றம் மற்றும் வளா்ச்சியை உருவாக்குவதில் மொழிக்கு இன்றியமையாத பங்கு உள்ளது என்பதை வலியுறுத்தவே ஒவ்வோா... மேலும் பார்க்க

சுகாதார நிலையக் கட்டடம் திறப்பு

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறில் சீரமைக்கப்பட்ட அரசு சுகாதார நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. தலைஞாயிறில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் கடந்த 1957-இல் கட்டப்பட்டது. இந்த கட்டடம் நாளடைவில... மேலும் பார்க்க

இளைஞா் நீதிக் குழும சமூகப் பணி உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்ட இளைஞா் நீதிக் குழுமத்திற்கு, சமூகப்பணி உறுப்பினா்கள் நியமனம் செய்யப்படவுள்ளனா் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மா... மேலும் பார்க்க