செய்திகள் :

வேலைக்கு போகாமல் மாதம் ரூ.1.6 லட்சம்; சம்பளமாக வந்த லஞ்சம்; அரசு அதிகாரியின் மனைவி சிக்கியது எப்படி?

post image

ராஜஸ்தான் மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை இணை இயக்குநராக இருப்பவர் பிரத்யூமன் தீட்ஷித். இவரது மனைவி பூனம். தீட்ஷித் மனைவி இரண்டு ஆண்டுகள் இரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் செல்லாமல் சம்பளம் வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஓரின்ப்ரோ சொலிஷன்ஸ் மற்றும் ட்ரீஜென் சாப்ட்வேர் லிமிடெட் போன்ற கம்பெனிகளில் 2019-20ம் ஆண்டுகளில் பூனம் வேலை செய்ததாகக் கூறி அந்த இரண்டு கம்பெனிகளும் பூனம் வங்கிக்கணக்கில் ரூ.37.54 லட்சத்தை வரவு வைத்திருக்கின்றன. ஆனால் பூனம் அந்த கம்பெனிக்கு வேலைக்குச் செல்லவில்லை.

மாறாக அந்த கம்பெனி தீட்ஷித் மூலம் அரசு துறைகளில் டெண்டர் பெற்று இருக்கிறது. அரசு டெண்டர் வழங்க தீட்ஷித் லஞ்சமாக வாங்காமல் அந்தப் பணத்தைத் தனது மனைவி அவர்களது கம்பெனியில் வேலை செய்வதாகக் கூறி சம்பளம் என்ற பெயரில் லஞ்சத்தை அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மனைவி பூனம்
மனைவி பூனம்

இது தொடர்பாக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரிக்குமாறு உயர் நீதிமன்றம் இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்குமாறு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையைத் தொடங்கியது.

விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்துள்ளன. விசாரணையில் பூனம் சம்பந்தப்பட்ட இரண்டு கம்பெனிக்கும் சென்றது கூட கிடையாது என்றும், அக்கம்பெனி எங்கு இருக்கிறது என்று கூட அவருக்குத் தெரியாது என்றும் தெரிய வந்துள்ளது. ஆனால் அவர் தங்களது கம்பெனியில் வேலை செய்தார் என்று கூறி இரு கம்பெனிகளும் பூனமின் 5 வங்கிக்கணக்குகளில் ரூ. 37.54 லட்சத்தை அனுப்பி இருக்கிறது. அதுவும் பூனம் ஒரே நேரத்தில் இரண்டு கம்பெனிகளில் வேலை செய்வதாக கணக்கு காட்டி இருக்கின்றனர்.

தனது மனைவி அக்கம்பெனிகளில் வேலை செய்தார் என்பதைக் காட்ட அட்டெண்டென்சில் தீட்ஷித் கையெழுத்து போட்டுள்ளார். ஒவ்வொரு மாதமும் தனது மனைவியின் வங்கிக்கணக்கில் ரூ.1.60 லட்சம் ரூபாய் சம்பளம் என்று குறிப்பிட்டு வரும் வகையில் தீட்ஷித் ஏற்பாடு செய்துள்ளார். அந்த லஞ்ச பணத்திற்காக ராஜஸ்தான் அரசுக்குச் சொந்தமான ராஜ்காம் என்ற நிறுவனம் மேற்கண்ட இரு நிறுவனங்களுக்கும் டெண்டர் கொடுத்து இருக்கிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி கார் வெடிப்பு: `Hyundai i20 கார், CCTV கேமராக்கள் ஆய்வு' - அமித் ஷா பேட்டி

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று (நவ 10) மாலை 6.50 ம... மேலும் பார்க்க

Delhi Car Blast: போலீஸ் கமிஷனருடன் அமித் ஷா பேச்சு; கார் வெடிப்பு குறித்து கெஜ்ரிவால் கவலை!

திங்கட்கிழமை (நவ. 10) மாலையில் டெல்லி செங்கோட்டை மெட்ரோ அருகே ஏற்பட்ட கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அருகாமையில் இருந்த வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.மெட்ரோ கேட் 1 அருகே கார... மேலும் பார்க்க

டெல்லி: செங்கோட்டை அருகே கார் வெடிப்பு; 8 பேர் பலி; நெஞ்சை உலுக்கும் வீடியோ - விசாரணை தீவிரம்!

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தால் அருகே இருந... மேலும் பார்க்க

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு; பெண் டாக்டர் காரில் ஏ.கே.47 ரக துப்பாக்கி பறிமுதல் - பகீர் பின்னணி!

ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இரண்டு டாக்டர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் போலீஸார் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசத்தில் ரெய்டு நடத்தினர். இதில் படித்து உயர் பதவியில் ... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: அனைத்து வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்த தவெக; 2 -ம் நாளாக சிபிஐ விசாரணை

ஆஜரான 12 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்கடந்த செப்டம்பர் 27-ம் தேதி த.வெ.க கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பா... மேலும் பார்க்க

டெல்லி: `பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் ஆயுதங்கள் சப்ளை; தாக்குதல் நடத்த சதி' - தீவிரவாதிகள் கைது

டெல்லி அருகே ஜம்மு காஷ்மீர் போலீஸார் ரெய்டு நடத்தி 350 கிலோ வெடிமருந்துகளையும், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யும் 20 ரிமோட்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று ஹரியானாவில் உள்ள பரிதாபாத்தில் இதே போலீஸா... மேலும் பார்க்க