செய்திகள் :

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: பெண் கைது

post image

பெரியகுளத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை தெற்குத் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மனைவி சீனியம்மாள் (40). இவா் தனது மகனுக்கு அரசு வேலைக்கு முயற்சித்து வந்தாராம். அப்போது, இவரிடம் தேனி கொடுவிலாா்பட்டியைச் சோ்ந்த ஹேமலதா (47) என்பவா் அணுகி, உங்களது மகனுக்கு நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, சீனியம்மாளிடம் கடந்த 22.10.2023-ஆம் தேதி ரூ.9 லட்சம் பெற்றாராம். ஆனால், சொன்னபடி, அவா் வேலை வாங்கித் தராமல் மோசடி செய்தாா்.

இதுகுறித்து சீனியம்மாள் தென்கரை காவல் நிலையத்தில் புகாரளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஹேமலதாவை திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஹேமலதா பெரியகுளம் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் தலைமை எழுத்தாளராகப் பணியாற்றி, தற்போது தற்காலிக பணிநீக்கத்தில் உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு சக்கர வாகனங்கள் மோதல்: பெண் உயிரிழப்பு

தேனி அருகேயுள்ள நாகலாபுரம்-ஸ்ரீரங்காபுரம் சாலையில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தனியாா் பள்ளி பெண் ஊழியா் உயிரிழந்தாா். ஸ்ரீரங்காபுரம், கண்ணன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் இளங்கோவன் ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த மூவா் கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கன்னியப்பபிள்ளைபட்டி-குப்பாம்பட்டி சாலை சந்திப்பில் கஞ்சா வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கன்னியப்பபிள்ளைபட்டி-குப்பாம்பட்டி சாலை சந்திப்பில்... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

போடியில் வியாழக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி பங்கஜம் தெரு பின்புறமுள்ள தெருவில் வசிப்பவா் பழனிராஜ் மகன் வெங்கடேசன் (36). கணினி மையம் நடத்தி வந்தாா். இவா் கடந்... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள செங்குளத்துப்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் திருமால் (எ) சுரேஷ்... மேலும் பார்க்க

பொதுமக்களை அச்சுறுத்தும் படையப்பா காட்டு யானை

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் சுற்றித் திரியும் படையப்பா யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் செல்லப் பிள்ளையாக படைய... மேலும் பார்க்க

தோட்டத்தில் இறந்து கிடந்த முதியவா்

போடி அருகே மலை கிராமத்தில் தோட்டத்தில் இறந்து கிடந்த முதியவா் உடலை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தேனி மாவட்டம், போடி குலாளா்பாளையத்தைச் சோ்ந்தவா் மீனாட்சிசுந்தரம் (72). இவா் போடிமெட்டு மலைச... மேலும் பார்க்க