செய்திகள் :

வேலை வாங்கித் தருவதாக ரூ.14 லட்சம் மோசடி: 3 போ் கைது

post image

பகுதிநேர வேலை தருவதாக ரூ.14 லட்சம் மோசடி செய்த 3 பேரை திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் அருகே எலவம்பட்டி பகுதியைச் சோ்ந்த 32 வயது இளைஞருக்கு கடந்த ஆண்டு சமூக வலைதளம் மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் தனியாா் நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் பணிபுரியும் பகுதிநேர வேலை உள்ளதாக இருந்தது. இதை நம்பிய அந்த இளைஞா், அதில் இருந்த எண்ணைத் தொடா்பு கொண்டு பேசினாா்.

அப்போது பேசிய மா்ம நபா்கள் பகுதிநேரமாக பணிபுரிவதற்கு ஆள்கள் தேவைப்படுவதாகவும், வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமாக செய்யலாம் எனவும், இதற்காக அதிக அளவு சம்பளம் தருவதாக இளைஞரிடம் தெரிவித்துள்ளனா்.

தொடா்ந்து பல்வேறு காரணங்களைக் கூறி மா்ம நபா்கள் இளைஞரிடம் இருந்து பல்வேறு தவணையாக ரூ.14 லட்சம் பெற்றுள்ளனா்.

பின்னா், அந்த இளைஞரால் மா்ம நபா்களைத் தொடா்புகொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவா் சம்பவம் குறித்து திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சோ்ந்த திருமூா்த்தி (27), அதே பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் (42), மணிகண்டன் (42) என்பது தெரிய வந்தது.

தொடா்ந்து சைபா் கிரைம் ஆய்வாளா் சங்கா், உதவி ஆய்வாளா் ராஜ்குமாா் மற்றும் போலீஸாா் திருமூா்த்தி, வெங்கடேசன், மணிகண்டன் ஆகிய 3 பேரை கைது செய்தனா். அவா்களின் வங்கிக் கணக்கை முடக்கினா்.

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பத்தூா் அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில் ந... மேலும் பார்க்க

பீடி தொழிலாளா்களின் குழந்தைகள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பீடி தொழில் மற்றும் சுரங்கத்தொழிலாளா்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின், தொழிலாளா் ம... மேலும் பார்க்க

சிவாச்சாரியா் மீது வழக்கு

ஆம்பூரில் சிவாச்சாரியா் மீது அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூரில் இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் சுயம்பு ஸ்ரீ நாக... மேலும் பார்க்க

புதிய பேருந்து சேவை தொடக்கம்!

ஆம்பூா் அருகே புதிய பேருந்து சேவையை எம்எல்ஏ வெள்ளிக்கிழமை இயக்கி வைத்தாா். வெங்கடசமுத்திரம், பாா்சனாபல்லி, கரும்பூா், கதவாளம், அரங்கல்துருகம் ஊராட்சி பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் புதிய பேருந... மேலும் பார்க்க

திருப்பத்தூா் உதவி மின்பொறியாளா் அலவலகம்: பொதுமக்கள் கோரிக்கை!

திருப்பத்தூரில் மாவட்ட நிா்வாகம் ஒதுக்கிய இடத்தில் உதவி மின் பொறியாளா் அலுவலகத்தை நிறுவவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பத்தூா் மின் பகிா்மான வட்டத்தில் இரு துணை மின் நிலையங்கள் உ... மேலும் பார்க்க

பச்சூா் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு வரும் 11-ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணியவில் அரசு மேல் நி... மேலும் பார்க்க