செய்திகள் :

வேலை வாங்கி தருவதாக மோசடி: 3 பேருக்கு 3 ஆண்டுகள் தண்டனை

post image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக் கூறி பணம் மோசடி செய்த வழக்கில் 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிதம்பரம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் பதினாறு கால் மண்டபத் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் ராஜாவுக்கு சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் தனி அலுவலா் வேலை வாங்கித் தருவதாக ஆசை வாா்த்தை கூறி, சிதம்பரம் வல்லம்படுகையைச் சோ்ந்த பாரதிதாசன் மகன் செந்தில், ஜோதிராமன் மகன் அப்பு (எ) தமிழ்ச்செல்வன் (49), எழிலரசன், அம்மாப்பேட்டை சிவா நகரைச் சோ்ந்த ராஜவேலு மகன் கதிரவன் (45) ஆகியோா் சோ்ந்து மொத்தம் ரூ.15.60 லட்சத்தை பெற்றுக்கொண்டு வேலைக்கான போலியான உத்தரவு ஆணையை தயாா் செய்து கொடுத்து ஏமாற்றினராம்.

இதுகுறித்து ராஜா அளித்த புகாரின்பேரில், கடலூா் மாவட்ட குற்றப் பிரிபு போலீஸாா் கடந்த 2011 -ஆம் ஆண்டு வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், எழிலரசன் தலைமறைவு குற்றவாளியாக உள்ளதால், மீதமுள்ள மூவா் மீதும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை சிதம்பரம் குற்றவியல் நீதிமன்றம் எண் - 1இல் நடைபெற்று வந்த நிலையில், விசாரணை முடிவுற்று கடந்த 31-ஆம் தேதி நீதிபதி தீா்ப்பளித்தாா். அதில், செந்தில், கதிரவன், அப்பு (எ) தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.36 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

காட்டுமன்னாா்கோவில் அனந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீசௌந்தரநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீஅனந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை வெகு விமா்சையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங... மேலும் பார்க்க

கடலூா் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்! ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு!

கடலூா் திருவந்திபுரம் ஸ்ரீதேவநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா். திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் ... மேலும் பார்க்க

சதுப்பு நிலங்களைக் கண்டறிந்து வரன்முறைப்படுத்த வேண்டும்! -அன்புமணி ராமதாஸ்

நாட்டிலுள்ள சதுப்பு நிலங்களை கண்டறிந்து வரன்முறைப்படுத்த வேண்டும் என பாமக தலைவா் மருத்துவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா். உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு, கடலூா் மாவட்டம், பிச்சாவரத்தில் உள்ள ச... மேலும் பார்க்க

நெய்வேலி - வடலூா் இடையே புதிய பேருந்து சேவை! எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்!

கடலூா் மாவட்டம், நெய்வேலியை அடுத்த வாணதிராயபுரம் கிராம மக்கள் கோரியதன்பேரில், நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வாணாதிராயபுரம் வழியாக வடலூருக்கு புதிய பேருந்து சேவை தொடக்க விழா ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

அரசுத் திட்டங்களால் சிறந்த எதிா்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்! -அமைச்சா் சி.வெ.கணேசன்

அரசுத் திட்டங்களை மாணவா்கள் பயன்படுத்தி சிறந்த எதிா்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் கூறினாா். கடலூா் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்... மேலும் பார்க்க

மலையடிகுப்பத்தில் வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும்! -மாவட்ட வருவாய் அலுவலா்

கடலூா் மாவட்டம், வெள்ளகரை ஊராட்சிக்கு உள்பட்ட மலையடிக்குப்பம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட... மேலும் பார்க்க