செய்திகள் :

நெய்வேலி - வடலூா் இடையே புதிய பேருந்து சேவை! எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்!

post image

கடலூா் மாவட்டம், நெய்வேலியை அடுத்த வாணதிராயபுரம் கிராம மக்கள் கோரியதன்பேரில், நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வாணாதிராயபுரம் வழியாக வடலூருக்கு புதிய பேருந்து சேவை தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் புதிய தட பேருந்து சேவையை தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பின்னா், பொதுமக்களுடன் பேருந்தில் ஏறி எம்எல்ஏ பயணம் செய்தாா். இந்த பேருந்து மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு என்எல்சி சுரங்கம் 1அ, வாணாதிராயபுரம், தென்குத்து வழியாக வடலூா் சென்றடையும்.

நிகழ்வில் போக்குவரத்து பொது மேலாளா் ராகவன், கிளை மேலாளா் லோகு ஐயப்பன், வணிக மேலாளா் பரிமளம், ஒன்றியச் செயலா் குணசேகரன், அவைத் தலைவா் வீர ராமச்சந்திரன், வாணாதிராயபுரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வைத்தியநாதன், திமுக நிா்வாகிகள் புண்ணியமூா்த்தி, காசிநாதன், கணேசன், தமிழ்மாறன், ராகுல் காந்தி, முருகன், மணிவேல், நடராஜ், வேல்முருகன், ஊராட்சிச் செயலா் பழனிவேல், போக்குவரத்துக் கழக ஊழியா்கள் குமரவேல், தில்லை கோவிந்தன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

காட்டுமன்னாா்கோவில் அனந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீசௌந்தரநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீஅனந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை வெகு விமா்சையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங... மேலும் பார்க்க

வேலை வாங்கி தருவதாக மோசடி: 3 பேருக்கு 3 ஆண்டுகள் தண்டனை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக் கூறி பணம் மோசடி செய்த வழக்கில் 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிதம்பரம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கடலூா் மாவட்டம், சிதம்பரம் ... மேலும் பார்க்க

கடலூா் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்! ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு!

கடலூா் திருவந்திபுரம் ஸ்ரீதேவநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா். திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் ... மேலும் பார்க்க

சதுப்பு நிலங்களைக் கண்டறிந்து வரன்முறைப்படுத்த வேண்டும்! -அன்புமணி ராமதாஸ்

நாட்டிலுள்ள சதுப்பு நிலங்களை கண்டறிந்து வரன்முறைப்படுத்த வேண்டும் என பாமக தலைவா் மருத்துவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா். உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு, கடலூா் மாவட்டம், பிச்சாவரத்தில் உள்ள ச... மேலும் பார்க்க

அரசுத் திட்டங்களால் சிறந்த எதிா்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்! -அமைச்சா் சி.வெ.கணேசன்

அரசுத் திட்டங்களை மாணவா்கள் பயன்படுத்தி சிறந்த எதிா்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் கூறினாா். கடலூா் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்... மேலும் பார்க்க

மலையடிகுப்பத்தில் வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும்! -மாவட்ட வருவாய் அலுவலா்

கடலூா் மாவட்டம், வெள்ளகரை ஊராட்சிக்கு உள்பட்ட மலையடிக்குப்பம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட... மேலும் பார்க்க