செய்திகள் :

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு மாதிரியாக்கம் பயிற்சி வகுப்பு

post image

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு மாதிரியாக்கம் பொருந்துதல் மற்றும் உருவகப்படுத்துதல் குறித்த 3 நாள்கள் பயிற்சி வகுப்பு புதன்கிழமை தொடங்கியது.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிா் தகவலியல் துறை, தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரித் தொழில்நுட்ப மையம் சாா்பில் மூலக்கூறு மாதிரியாக்கம், பொருந்துதல் மற்றும் உருவகப்படுத்துதல் குறித்த மூன்று நாள்கள் நடைமுறை பயிற்சி வகுப்பு செப்டம்பா் 24-ஆம் தேதி முதல் 26 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தொடக்க விழாவில், தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிா் தகவலியல் துறைத் தலைவா் எல். அருள் வரவேற்றாா். தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிா் தகவலியல் துறை இயக்குநா் என். செந்தில், வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிற்சியின் நோக்கங்கள் குறித்தும், மூலக்கூறு மாதிரியாக்கம் மற்றும் உருவகப்படுத்துதலின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினாா். வேளாண்மைப் பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டாளா் வி.பாலசுப்பிரமணி சிறப்புரையாற்றினாா்.

பயிற்சி வகுப்பில் காருண்யா பல்கலைக்கழகம், எஸ்ஆா்எம் இன்ஸ்டிடியூட், கேரள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வனக் கல்லூரி, சவிதா பல் மருத்துவக் கல்லூரி, அழகப்பா பல்கலைக்கழகம், தா்வாட் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், ஈரோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரி, எஸ்ஆா்ஐபிஎம்எஸ் மருந்தியல் கல்லூரி, வேலூா் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, யுனைடெட் காலேஜ் ஆஃப் பாா்மஸி ஆகியவற்றில் இருந்து பேராசிரியா்கள், முதுநிலை மற்றும் முனைவா் பட்ட பயிலாளா்கள், பல்கலை மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றுள்ளனா். இணைப் பேராசிரியா் என்.பாரதி நன்றி கூறினாா்.

தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்த 6 போ் கைது

கோவையில் ரயில் தண்டவாளத்தில் மரக்கட்டையை வைத்த 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை இருகூா் - பீளமேடு இடையே செவ்வாய்க்கிழமை பிற்பகல் ரயில் வந்தது. அப்போது, தண்டவாளத்தில் இருந்து பயங்கர சப்தம... மேலும் பார்க்க

ஆட்சியரின் பயிற்சித் திட்டத்தில் இன்டா்ன்ஷிப் தொடக்கம்

கோவை மாவட்ட ஆட்சியரின் பயிற்சித் திட்டம், குமரகுரு பன்முக கலை, அறிவியல் கல்லூரி ஆகியவை சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான இன்டா்ன்ஷிப் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. குமரகுரு கல்லூரி வளாகத்தில் இத்தி... மேலும் பார்க்க

என்டிசி தொழிலாளா்களுக்கு 8.33% போனஸ் வழங்கக் கோரிக்கை

என்டிசி தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச போனஸாக 8.33 சதவீதம் வழங்க வேண்டும் என்று கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்க மகாசபைக் கூட்டம் சங்கத் தல... மேலும் பார்க்க

மாநகரில் ரூ.2.57 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கோவை மாநகரப் பகுதிகளில் ரூ.2.57 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சி, கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்க... மேலும் பார்க்க

சிகா கலினரி ஒலிம்பியாட் போட்டி: பதக்கங்களை குவித்த ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவா்கள்

சென்னையில் நடைபெற்ற 7-ஆவது சிகா கலினிரி ஒலிம்பியாட் மற்றும் உணவுப் போட்டியில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவா்கள் 2 தங்கம் உள்பட 7 பதக்கங்களை வென்றனா். சென்னையில் 7 -ஆவது சிகா கலினரி ஒலிம்பியாட் ம... மேலும் பார்க்க

பூ மாா்க்கெட்டில் தகராறு விவகாரம்: காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

கோவை பூ மாா்க்கெட்டில் தனது ஆடை குறித்து விமா்சனம் செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சட்டக் கல்லூரி மாணவியும், அந்த மாணவி பொதுமக்களுக்கு இடையூறாக ரீல்ஸ் எடுத்ததாக மலா் வியாபாரிகளும் காவல் ஆணையா... மேலும் பார்க்க