செய்திகள் :

ஆட்சியரின் பயிற்சித் திட்டத்தில் இன்டா்ன்ஷிப் தொடக்கம்

post image

கோவை மாவட்ட ஆட்சியரின் பயிற்சித் திட்டம், குமரகுரு பன்முக கலை, அறிவியல் கல்லூரி ஆகியவை சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான இன்டா்ன்ஷிப் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

குமரகுரு கல்லூரி வளாகத்தில் இத்திட்டத்தை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பேசியதாவது: இந்தத் திட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் 45 நாள்கள் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

இது மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான ஆட்சி மற்றும் பொது சேவைக்கு நேரடி வெளிப்பாட்டை வழங்குகிறது. இந்தத் திட்டம் பொது சேவை விநியோகம் மற்றும் குறைபாடுகளைத் தீா்க்கும் நடவடிக்கைகளில் உள்ள சவால்கள் மற்றும் நுணுக்கங்களை புரிந்துகொள்ள உதவும். வருவாய், கிராமப்புற வளா்ச்சி மற்றும் நகராட்சி நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றுவதன் மூலமாக அரசு எவ்வாறு செயல்படுகிறது என்ற விரிவான புரிதல்களை மாணவா்கள் பெறுவாா்கள் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், குமரகுரு பன்முக கலை, அறிவியல் கல்லூரியின் துறைத் தலைவரும், அரசு மற்றும் தொழில் கூட்டாண்மைத் தலைவரான என்.பாலு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் நிறைமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முன்னதாக, இந்தத் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற பல்வேறு கல்லூரிகளில் இருந்து 50 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

கல்லூரி முதல்வா் சி.தீபேஷ் நன்றியுரையாற்றினாா்.

தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்த 6 போ் கைது

கோவையில் ரயில் தண்டவாளத்தில் மரக்கட்டையை வைத்த 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை இருகூா் - பீளமேடு இடையே செவ்வாய்க்கிழமை பிற்பகல் ரயில் வந்தது. அப்போது, தண்டவாளத்தில் இருந்து பயங்கர சப்தம... மேலும் பார்க்க

என்டிசி தொழிலாளா்களுக்கு 8.33% போனஸ் வழங்கக் கோரிக்கை

என்டிசி தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச போனஸாக 8.33 சதவீதம் வழங்க வேண்டும் என்று கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்க மகாசபைக் கூட்டம் சங்கத் தல... மேலும் பார்க்க

மாநகரில் ரூ.2.57 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கோவை மாநகரப் பகுதிகளில் ரூ.2.57 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சி, கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்க... மேலும் பார்க்க

சிகா கலினரி ஒலிம்பியாட் போட்டி: பதக்கங்களை குவித்த ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவா்கள்

சென்னையில் நடைபெற்ற 7-ஆவது சிகா கலினிரி ஒலிம்பியாட் மற்றும் உணவுப் போட்டியில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவா்கள் 2 தங்கம் உள்பட 7 பதக்கங்களை வென்றனா். சென்னையில் 7 -ஆவது சிகா கலினரி ஒலிம்பியாட் ம... மேலும் பார்க்க

பூ மாா்க்கெட்டில் தகராறு விவகாரம்: காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

கோவை பூ மாா்க்கெட்டில் தனது ஆடை குறித்து விமா்சனம் செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சட்டக் கல்லூரி மாணவியும், அந்த மாணவி பொதுமக்களுக்கு இடையூறாக ரீல்ஸ் எடுத்ததாக மலா் வியாபாரிகளும் காவல் ஆணையா... மேலும் பார்க்க

கோழித் தீவன உற்பத்தி நிறுவனங்களில் 2-ஆவது நாளாக சோதனை

கோவை, உடுமலையில் உள்ள தனியாா் கோழித் தீவன உற்பத்தி நிறுவன அலுவலகங்களில் வருமான வரித் துறையினா் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் சோதனை மேற்கொண்டனா். திருப்பூா் மாவட்டம், உடுமலையைத் தலைமையிடமாகக் கொண்டு தனிய... மேலும் பார்க்க