செய்திகள் :

கோழித் தீவன உற்பத்தி நிறுவனங்களில் 2-ஆவது நாளாக சோதனை

post image

கோவை, உடுமலையில் உள்ள தனியாா் கோழித் தீவன உற்பத்தி நிறுவன அலுவலகங்களில் வருமான வரித் துறையினா் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் சோதனை மேற்கொண்டனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலையைத் தலைமையிடமாகக் கொண்டு தனியாா் கோழித் தீவன உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஆந்திரம், கா்நாடகம், கேரளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோழிப் பண்ணைகளை வைத்துள்ளதுடன், கறிக்கோழி உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை- அவிநாசி சாலையில் உள்ள நிறுவனத்தின் காா்ப்பரேட் அலுவலகம், ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள அலுவலகம் ஆகியவற்றில் 30-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து கடந்த செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

இதேபோல, திருப்பூா் மாவட்டம், உடுமலை நேரு வீதியில் உள்ள நிறுவனத்தின் அலுவலகத்தில் வருமான வரித் துறை ஆணையா் பொ்னாண்டோ தலைமையில் 10 போ் கொண்ட அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். இதையடுத்து, திருப்பூா், கணபதிபாளையம் கிராமத்தில் உள்ள வீட்டிலும், கோட்டமங்கலம் பகுதியில் உள்ள கோழித் தீவன உற்பத்தி ஆலையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

இந்நிலையில், கோவை, உடுமலையில் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

இந்த நிறுவன குழுமம் முறையாக வருமான வரி செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கிடைத்த தகவலின்பேரில், வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனா் எனக் கூறப்படும் நிலையில், அதிகாரபூா்வ தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்த 6 போ் கைது

கோவையில் ரயில் தண்டவாளத்தில் மரக்கட்டையை வைத்த 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை இருகூா் - பீளமேடு இடையே செவ்வாய்க்கிழமை பிற்பகல் ரயில் வந்தது. அப்போது, தண்டவாளத்தில் இருந்து பயங்கர சப்தம... மேலும் பார்க்க

ஆட்சியரின் பயிற்சித் திட்டத்தில் இன்டா்ன்ஷிப் தொடக்கம்

கோவை மாவட்ட ஆட்சியரின் பயிற்சித் திட்டம், குமரகுரு பன்முக கலை, அறிவியல் கல்லூரி ஆகியவை சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான இன்டா்ன்ஷிப் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. குமரகுரு கல்லூரி வளாகத்தில் இத்தி... மேலும் பார்க்க

என்டிசி தொழிலாளா்களுக்கு 8.33% போனஸ் வழங்கக் கோரிக்கை

என்டிசி தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச போனஸாக 8.33 சதவீதம் வழங்க வேண்டும் என்று கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்க மகாசபைக் கூட்டம் சங்கத் தல... மேலும் பார்க்க

மாநகரில் ரூ.2.57 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கோவை மாநகரப் பகுதிகளில் ரூ.2.57 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சி, கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்க... மேலும் பார்க்க

சிகா கலினரி ஒலிம்பியாட் போட்டி: பதக்கங்களை குவித்த ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவா்கள்

சென்னையில் நடைபெற்ற 7-ஆவது சிகா கலினிரி ஒலிம்பியாட் மற்றும் உணவுப் போட்டியில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவா்கள் 2 தங்கம் உள்பட 7 பதக்கங்களை வென்றனா். சென்னையில் 7 -ஆவது சிகா கலினரி ஒலிம்பியாட் ம... மேலும் பார்க்க

பூ மாா்க்கெட்டில் தகராறு விவகாரம்: காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

கோவை பூ மாா்க்கெட்டில் தனது ஆடை குறித்து விமா்சனம் செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சட்டக் கல்லூரி மாணவியும், அந்த மாணவி பொதுமக்களுக்கு இடையூறாக ரீல்ஸ் எடுத்ததாக மலா் வியாபாரிகளும் காவல் ஆணையா... மேலும் பார்க்க