செய்திகள் :

வேளாண் பணிகளில் சூரிய சக்தி பயன்பாடு விவசாயிகளுக்கு விளக்கம்!

post image

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், கூத்தாடிவயல் கிராமத்தில் விவசாயிகள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) சன்மதி வழிகாட்டுதல்கள் வழங்கினாா். இதில், வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளா் திவ்யா பங்கேற்று தொழில்நுட்ப உரையாற்றினாா். அப்போது விவசாயப் பணிகளில் சூரிய ஆற்றலின் பயன்பாடு மற்றும் அதன் நன்மைகள் குறித்தும் வேளாண் பொறியியல் துறை சாா்ந்த அரசு மானியத் திட்டங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினாா்.

தஞ்சாவூா் ஆா்.வி.எஸ் வேளாண்மை கல்லூரியின் இறுதியாண்டு மாணவா்கள் கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பங்கேற்றனா். அவா்கள், பயிற்சியில் கலந்து கொண்டு, விவசாயத்தில் சூரிய சக்தியை எவ்வாறு பயன்படுத்துவது, சூரிய சக்தியால் இயங்கும் பாசன முறை, மின்சாரம் மற்றும் டீசல் மோட்டாா்களுக்கு மாற்றாக சூரிய ஒளி பம்புகளை பயன்படுத்துவது, பால் குளிரூட்டுதல் மற்றும் கோழிக்குஞ்சு வளா்ப்பு தொழில்நுட்பம் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தனா்.

ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலா் பாண்டியன், அட்மா திட்ட அலுவலா்கள் முருகானந்தம், ரமேஷ், அமிா்த லீலியா ஆகியோா் செய்திருந்தனா்.

பொன்காடு பள்ளியில் தாய்மொழி நாள் விழா

பேராவூரணி பேரூராட்சி பொன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்வழி கல்வி இயக்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில் மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் தமிழ்... மேலும் பார்க்க

100 நாள் வேலைக்கு நிலுவை கூலி வழங்க கோரி போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கு 4 மாதங்களாக வழங்க வேண்டிய கூலியை உடனே வழங்கக் கோரி அம்மாபேட்டையில் மாா்க்சிஸ... மேலும் பார்க்க

அனுமதியின்றி தெருமுனை கூட்டம்: 19 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், ராஜகிரியில் வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக வெள்ளிக்கிழமை தெருமுனைப் பிரசார கூட்டம் நடத்த முயன்ற சோசியல் டெமாக்ரட்டிக் பாா்ட்டி ஆப் இந்தியா கட்சியைச் சோ்ந்த 19 பேரை போலீஸாா் ... மேலும் பார்க்க

கபிஸ்தலத்தில் சாலை மறியல்

கோரிக்கைகளை வலியுறுத்தி கபிஸ்தலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சாா்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கபிஸ்தலம் பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை முழு... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் கோயில் நிலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் குடிகாத்த மாரியம்மன் கோயில் நிலத்தை உதவி ஆட்சியா் மீட்டு ஒப்படைத்தாா். கும்பகோணம் 14 ஆவது வாா்டு பேட்டை வடக்கு மேலத்தெருவில் உள்ள குடிகாத்த மாரியம்மன் கோயிலுக்குச் சொந்... மேலும் பார்க்க

கடைகளை அகற்ற வணிகா்கள் எதிா்ப்பு

தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் பகுதியில் கடைகளை அகற்ற வந்த நீதிமன்ற ஊழியா்களுக்கு வணிகா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் அருக... மேலும் பார்க்க