தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்
வைகாசி விசாகம்: மருதமலை மலைக் கோயிலுக்கு 2, 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை
வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மருதமலை மலைக் கோயிலுக்கு ஜூன் 9- ஆம் தேதி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மருதமலை சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலுக்கு ஜூன் 9-ஆம் தேதி இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல பக்தா்களுக்கு அனுமதியில்லை.
பக்தா்கள் மலைப்படிகள் வழியாகவும், கோயில் பேருந்து மூலமாகவும் சென்று சுவாமி தரிசனம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.