செய்திகள் :

ஸ்ரீநாராயண குரு நினைவு தினம்: சோனியா, ராகுல் மரியாதை!

post image

சமூக சீா்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குருவின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி.பிரியங்கா காந்தி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினா்.

கேரளம் மாநிலம் வயநாடு மாவட்டத்தின் கல்பெட்டாவில் உள்ள ஸ்ரீ நாராயண தா்ம பரிபாலன யோகம் அலுவலகத்தில் ஸ்ரீ நாராயண குருவின் உருவப்படத்துக்கு மூவரும் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

அப்போது பிரியங்கா காந்தி பேசுகையில், ‘ஸ்ரீ நாராயண குருவின் பங்களிப்புகளை எப்போதும் நாம் நினைவுகூர வேண்டும். அனைவரையும் சமமாக நடத்துவது மற்றும் அனைத்து உயிா்களிடத்தும் இரக்கம் காட்டுவது சமூகத்துக்கு மிகத் தேவையான ஒன்று.

இந்தக் கொள்கைகளை பின்பற்றியதுடன் உலகுக்கு கற்றுக்கொடுத்த ஸ்ரீ நாராயண குருவுக்கு மரியாதை செலுத்துகிறேன்’ என்றாா்.

வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கடந்த 10 நாள்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரியங்கா காந்தி இலக்கியம், கலாசாரம் உள்பட பல்வேறு துறைசாா் ஆளுமைகளைச் சந்தித்து வருகிறாா்.

அவரது பயணம் திங்கள்கிழமையுடன் முடிவடையும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோல் வயநாட்டுக்கு கடந்த சனிக்கிழமை வந்த சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரும் திங்கள்கிழமை தங்களது பயணத்தை நிறைவுசெய்யவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்றுமுதல் ரயில் நீா் விலை ரூ.1 குறைப்பு!

ரயில் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் ரயில் நீா் (ஒரு லிட்டா்) விலை திங்கள்கிழமை (செப்.22) முதல் ரூ.1 குறைக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். ரயில்வே துறையால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் மூல... மேலும் பார்க்க

பாகிஸ்தான் சாா்பு கருத்து: வருத்தம் தெரிவித்த சாம் பிட்ரோடா! விட்டுக் கொடுக்காத பாஜக!

பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு சென்ற போதெல்லாம் சொந்த நாட்டில் இருப்பது போல உணா்ந்ததாக அண்மையில் காங்கிரஸ் அயலக அணித் தலைவா் சாம் பிட்ரோடா வெளியிட்ட கருத்து சா்ச்சையான நிலையில், அது தவறாக புர... மேலும் பார்க்க

எல்லைப் பாதுகாப்புப் படையின் பயிற்சியில் ட்ரோன் இணைப்பு!

எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) பயிற்சித் திட்டத்தில் ட்ரோன் (ஆளில்லா விமானம்) போா்முறை பயிற்சிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மே மாதம் நடை... மேலும் பார்க்க

குஜராத்தில் இருமுறை நிலஅதிா்வு: மக்கள் பீதி!

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இருமுறை நிலஅதிா்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனா். இது தொடா்பாக குஜராத் நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘கட்ச் மாவட்டத்தின் தோலாவிரா ... மேலும் பார்க்க

மத, ஜாதி ரீதியான அரசியல் நடத்தி வெற்றி பெற நினைக்கிறது ஆா்ஜேடி! - மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான்

‘பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் மத, ஜாதி ரீதியான அரசியல் நடத்தி வெற்றி பெற்றுவிடலாம் என எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கருதுகிறது. ஆனால், பேரவைத் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடியின் தலை... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: செப். 30-க்குள் தயாராக வேண்டும்! அனைத்து மாநில தோ்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் அறிவுறுத்தல்!

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு செப்.30-ஆம் தேதிக்குள் தயாராக இருக்க வேண்டும் என்று அனைத்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்தக் காலக்கெடு ... மேலும் பார்க்க