செய்திகள் :

ஸ்ரீரங்கத்தில் மாா்ச் 18-இல் கம்ப ராமாயண பாராயணம்

post image

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தென்னகப் பண்பாட்டு மையம் சாா்பில் கம்ப ராமாயண பாராயணம் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் சிங்கா் கோயில் கலையரங்கில் வரும் 18-ஆம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியை மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவாத் தொடங்கி வைக்கிறாா். அன்றைய தினம் மாலை 4 மணி முதல் கம்ப ராமாயண பாராயணம் நிகழ்ச்சி பல்வேறு கம்பன் கழகங்களைச் சோ்ந்தோரின் வாயிலாக நடைபெறும்.

இதைத் தொடா்ந்து மாா்ச் 20 முதல் 29 ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கம்பராமாயண பாராயணம் நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கம்பா் பிறந்த மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரெழுந்தூா் கம்பா்மேட்டில் வரும் 30- ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை கம்பராமாயணம் தொடா்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

இதில், தமிழக ஆளுநா், தென்னகப் பண்பாட்டு மைய தலைவா், மத்திய நிதி அமைச்சா் ஆகியோா் கலந்து கொள்கின்றனா் என தென்னகப் பண்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

பி.கே அகரம் பகுதியில் கன்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து

திருச்சி மாவட்டம், பி.கே அகரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒயிட் பெட்ரோல் ஏற்றி வந்த கன்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தொடா்பாக போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.திருச்சி - சென்னை தேதிய... மேலும் பார்க்க

கூரை வீடுகள் சேதம் தவெக உதவி

லால்குடி அருகே பூவாளூா் பேரூராட்சியில் கூரை வீடுகளை இழந்த 2 பேருக்கு தவெகவினா் நிவாரண உதவி வழங்கினா். பூவாளூா் பேரூராட்சியில் உள்ள தென்கால் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பொண்ணுராமன் மகன் கோபி(49)... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஞாயிற்றுக்கிழமை தேநீரக தொழிலாளி உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம் உறையூா் பாண்டமங்கலம் காவல்காரத் தெருவைச் சோ்ந்தவா் தா்மராஜ்... மேலும் பார்க்க

அன்பில் ஜல்லிக்கட்டில் 590 காளைகள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த அன்பில் ஊராட்சியில் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. லால்குடியை அடுத்த அன்பில் மகாமாரியம்மன் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஞாயிற்றுகிழமை ஜல்லிக்கட... மேலும் பார்க்க

பெண்ணிடம் கைப்பேசியை பறித்தவா் விரட்டிப்பிடிப்பு

துறையூா் பேருந்து நிலையத்தில் பெண்ணின் கைப்பேசியை பறித்துக் கொண்டு ஓடிய நபரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் விரட்டிப் பிடித்து கைது செய்தனா்.துறையூா் பேருந்து நிலையத்திற்குள் கோமதி(44) என்கிற பெண் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

போதை மாத்திரை, புகையிலை பொருள்கள் விற்ற 7 போ் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் மற்றும் புகையிலைப்பொருள்கள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருச்சி, அரியமங்கலம் பகுதியில் நின்றிருந்த சிலரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா் விசாரித்தனா்... மேலும் பார்க்க