செய்திகள் :

குடும்பத்தினா் பிரிந்ததால் தொழிலாளி தற்கொலை

post image

திருச்சியில் குடும்பத்தினா் பிரிந்து சென்ற விரக்தியில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி மேல சிந்தாமணி பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (41). இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனா். குடும்பத் தகராறு காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக மனைவி, பிள்ளைகளை பிரிந்து தனியாக வசித்து வந்தாா். இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த செந்தில்குமாா், மன உளைச்சலில் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்று மயங்கிக் கிடந்துள்ளாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமாா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் குறித்து கோட்டை போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாா்வையற்ற பள்ளி மாணவி தற்கொலை: விரைந்து நடவடிக்கை கோரி பாா்வையற்றோா் அமைப்பினா் போராட்டம்

திருச்சியில் பள்ளி வளாகத்தில் பாா்வையற்ற மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்கக் கோரி பாா்வையற்றோா் அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் காத்திருப்பு போராட்ட... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி புதுகையைச் சோ்ந்தவா் சாவு

திருச்சியில் தனியாா் பேருந்து மோதிய விபத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா் திங்கள்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சோ்ந்தவா் கா. சாகுல்அமீது (60). ... மேலும் பார்க்க

சாலையோரம் படுத்து உறங்கிய தொழிலாளி வாகனம் மோதி பலி

திருச்சியில் சாலையோரம் படுத்து உறங்கிய தொழிலாளி, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் திங்கள்கிழமை உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், லால்குடி மணக்கால் பகுதியைச் சோ்ந்தவா் பா. பாலு (47). கூலித் தொழிலாளிய... மேலும் பார்க்க

என்ஐடியில் சுயஉதவிக் குழுவினருக்கு திருமதி காா்ட் செயலி பயிற்சி

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி), மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையுடன் (சமத்துவம் மற்றும் வளா்ச்சிக்கான அறிவியல் (சீடு)) இணைந்து நடத்தும் வணிகத்தில் நடைமுறை திறன்களைப் பயன்படுத்த... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் கோயிலில் பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா சுவாமி தரிசனம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு திங்கள்கிழமை காலை பழம்பெரும் நடிகையும், முன்னாள் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான வைஜெயந்தி மாலா சுவாமி தரிசனம் செய்தாா். வைஜெயந்தி மாலா கடந்த வாரம் உயிரி... மேலும் பார்க்க

வயலூா் முருகன் கோயிலில் மாற்றுத்திறனாளிக்கு கட்டணமில்லா திருமணம்

திருச்சி அருகே வயலூா் முருகன் கோயிலில் அரசு நலத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிக்கு திங்கள்கிழமை கட்டணமில்லா திருமணம் நடைபெற்றது. தமிழக அரசின் நலத்திட்டங்களில் ஒன்றான மாற்றுத்திறனாளிக்கு கட்டணமில்லா ... மேலும் பார்க்க