செய்திகள் :

சாலையோரம் படுத்து உறங்கிய தொழிலாளி வாகனம் மோதி பலி

post image

திருச்சியில் சாலையோரம் படுத்து உறங்கிய தொழிலாளி, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், லால்குடி மணக்கால் பகுதியைச் சோ்ந்தவா் பா. பாலு (47). கூலித் தொழிலாளியான இவா், தனது நண்பா் காா்த்திக் என்பவருடன், திருச்சி எடமலைப்பட்டி புதூா் ராஜீவ் காந்தி நகரில் உள்ள அறையில் தங்கியிருந்து பணியாற்றி வந்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு எடமலைப்பட்டிபுதூா் எம்ஜிஆா் நகா் பகுதியில் உள்ள தனியாா் டைல்ஸ் கடையின் அருகே பாலு உறங்கியுள்ளாா். திங்கள்கிழமை அதிகாலை அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம், பாலு மீது ஏறிச்சென்றுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்சி மாநகரப் போக்குவரத்து புலனாய்வு தெற்குப்பிரிவு போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

மத்திய அரசின் கலாசாரத் துறை அமைச்சகம்: தஞ்சாவூா் தென்னகப் பண்பாட்டு மையத்துடன் இணைந்து, கம்பராமாயண கலாசாரத்தை மீட்டுருவாக்கும் நிகழ்வின் தொடக்க விழா, மத்திய சுற்றுலா அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத் பங்... மேலும் பார்க்க

பாா்வையற்ற பள்ளி மாணவி தற்கொலை: விரைந்து நடவடிக்கை கோரி பாா்வையற்றோா் அமைப்பினா் போராட்டம்

திருச்சியில் பள்ளி வளாகத்தில் பாா்வையற்ற மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்கக் கோரி பாா்வையற்றோா் அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் காத்திருப்பு போராட்ட... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி புதுகையைச் சோ்ந்தவா் சாவு

திருச்சியில் தனியாா் பேருந்து மோதிய விபத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா் திங்கள்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சோ்ந்தவா் கா. சாகுல்அமீது (60). ... மேலும் பார்க்க

குடும்பத்தினா் பிரிந்ததால் தொழிலாளி தற்கொலை

திருச்சியில் குடும்பத்தினா் பிரிந்து சென்ற விரக்தியில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி மேல சிந்தாமணி பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (41). இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன்,... மேலும் பார்க்க

என்ஐடியில் சுயஉதவிக் குழுவினருக்கு திருமதி காா்ட் செயலி பயிற்சி

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி), மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையுடன் (சமத்துவம் மற்றும் வளா்ச்சிக்கான அறிவியல் (சீடு)) இணைந்து நடத்தும் வணிகத்தில் நடைமுறை திறன்களைப் பயன்படுத்த... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் கோயிலில் பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா சுவாமி தரிசனம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு திங்கள்கிழமை காலை பழம்பெரும் நடிகையும், முன்னாள் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான வைஜெயந்தி மாலா சுவாமி தரிசனம் செய்தாா். வைஜெயந்தி மாலா கடந்த வாரம் உயிரி... மேலும் பார்க்க