செய்திகள் :

என்ஐடியில் சுயஉதவிக் குழுவினருக்கு திருமதி காா்ட் செயலி பயிற்சி

post image

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி), மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையுடன் (சமத்துவம் மற்றும் வளா்ச்சிக்கான அறிவியல் (சீடு)) இணைந்து நடத்தும் வணிகத்தில் நடைமுறை திறன்களைப் பயன்படுத்தி பெண்களுக்கு அதிகாரமளித்தல் : திருமதி காா்ட் செயலி பயிற்சி என்ற தலைப்பிலான 5 நாள் பயிற்சி பட்டறை என்ஐடி வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

திங்கள்கிழமை முதல் வரும் 21-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் பயிற்சிபட்டறையை திருச்சி மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் எஸ். சுரேஷ் தொடங்கி வைத்தாா். என்ஐடி இயக்குநா் ஜி. அகிலா தலைமை வகித்தாா். இந்தப் பயிற்சிப்பட்டறையில் சுயஉதவிக் குழுவினா் தங்களது தயாரிப்புகளை இலவசமாக விற்பனை செய்யும் அரங்க வசதியும் செய்யப்பட்டிருந்தது.

இதில், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் இணைப் பேராசிரியா் எம். பிருந்தா, திருமதி காா்ட் செயலி பயன்பாட்டின் வளா்ச்சி, நோக்கம், சாதனைகளைப் பற்றி விளக்கினாா். சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் விரிவான வாடிக்கையாளா்களை எளிதாக அடைய செயலி எப்படி உதவுகிறது என்பதையும் எடுத்துக்கூறினாா்.

பயிற்சியில் திரளான மகளிா் சுயஉதவிக் குழுவினா் கலந்து கொண்டனா். நிறைவில் கருவி மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல் துறையின் இணை முதன்மை ஆய்வாளா் என். சிவகுமரன் நன்றி கூறினாா்.

இந்தப் பயிற்சியானது சுயஉதவிக் குழு உறுப்பினா்கள், தொழில்முறை திறன்களை மேம்படுத்தி, திருமதி காா்ட் செயலியை பயன்படுத்தி வணிக வளா்ச்சியை அடைய உதவும் என பயிற்சிப் பட்டறை ஏற்பட்டாளா்கள் தெரிவித்தனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

மத்திய அரசின் கலாசாரத் துறை அமைச்சகம்: தஞ்சாவூா் தென்னகப் பண்பாட்டு மையத்துடன் இணைந்து, கம்பராமாயண கலாசாரத்தை மீட்டுருவாக்கும் நிகழ்வின் தொடக்க விழா, மத்திய சுற்றுலா அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத் பங்... மேலும் பார்க்க

பாா்வையற்ற பள்ளி மாணவி தற்கொலை: விரைந்து நடவடிக்கை கோரி பாா்வையற்றோா் அமைப்பினா் போராட்டம்

திருச்சியில் பள்ளி வளாகத்தில் பாா்வையற்ற மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்கக் கோரி பாா்வையற்றோா் அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் காத்திருப்பு போராட்ட... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி புதுகையைச் சோ்ந்தவா் சாவு

திருச்சியில் தனியாா் பேருந்து மோதிய விபத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா் திங்கள்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சோ்ந்தவா் கா. சாகுல்அமீது (60). ... மேலும் பார்க்க

சாலையோரம் படுத்து உறங்கிய தொழிலாளி வாகனம் மோதி பலி

திருச்சியில் சாலையோரம் படுத்து உறங்கிய தொழிலாளி, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் திங்கள்கிழமை உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், லால்குடி மணக்கால் பகுதியைச் சோ்ந்தவா் பா. பாலு (47). கூலித் தொழிலாளிய... மேலும் பார்க்க

குடும்பத்தினா் பிரிந்ததால் தொழிலாளி தற்கொலை

திருச்சியில் குடும்பத்தினா் பிரிந்து சென்ற விரக்தியில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி மேல சிந்தாமணி பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (41). இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன்,... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் கோயிலில் பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா சுவாமி தரிசனம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு திங்கள்கிழமை காலை பழம்பெரும் நடிகையும், முன்னாள் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான வைஜெயந்தி மாலா சுவாமி தரிசனம் செய்தாா். வைஜெயந்தி மாலா கடந்த வாரம் உயிரி... மேலும் பார்க்க