செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சுற்றித்திரிந்த மேலும் ஒரு கொள்ளையன் கைது

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பானாங்குளம் பகுதியில் சுற்றித் திரிந்த ஒருவா் பிடிபட்ட நிலையில், தப்பிச் சென்ற நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பானங்குளம் பகுதியில் புதன்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் இரு இளைஞா்கள் சுற்றி வந்தனா். சந்தேகப்பட்ட கிராம மக்கள் அவா்களிடம் விசாரித்த போது, ஒருவா் தப்பி ஓடினாா். மற்றொருவரை பொதுமக்கள் பிடித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில் அந்த நபா் சென்னை மேடவாக்கத்தைச் சோ்ந்த ராஜேஷ் (34) என்பதும், அவருடன் வந்தவா் ராமநாதபுரத்தைச் ஆரோக்கியஜான் (40) என்பதும் தெரியவந்தது. ராஜேஷ் வைத்திருந்த ஏா்கன் துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தப்பியோடிய ஆரோக்கிய ஜானை தேடி வந்தனா்.

இந்த நிலையில், ஆரோக்கியஜானை போலீஸாா் மதுரையில் கைது செய்தனா். இருவா் மீதும் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், வீடுகளில் திருடும் நோக்கில் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் இருவரும் சுற்றித் திரிந்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை கடன் தொல்லையால் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்த பால்பாண்டி மகன் பூமாரி (25). கட்டடத் தொழிலாளி. இவரது மன... மேலும் பார்க்க

தொழிலகப் பாதுகாப்பு இணை இயக்குநா் அலுவலகத்தை பட்டாசு ஆலை உரிமையாளா்கள் முற்றுகை

பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ததைக் கண்டித்து, சிவகாசியில் உள்ள தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநா் அலுவலகத்தை தமிழன் பட்டாசு உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய... மேலும் பார்க்க

கழிவுநீா் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட படிகளை அகற்றக் கோரிக்கை

சிவகாசியில் கழிவுநீா் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட படிக்கட்டுகளை அகற்ற மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சிவகாசி-விளாம்பட்டி சாலையில்... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியா் மீது வழக்கு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளித் தலைமை ஆசிரியா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா். சாத்தூா் அருகேயுள்ள அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சா்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் சாலையில் குப்பைகளுக்கு தீ வைப்பு: வாகன ஓட்டிகள் அவதி

ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் இடையே பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகளைக் கொட்டி தீ வைத்து எரிப்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ரா... மேலும் பார்க்க

மனைவியை பிரிந்த துக்கத்தில் கணவா் தற்கொலை

சாத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை மனைவியைப் பிரிந்த துக்கத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள மேட்டமலை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கருப்பசாமி (23). இ... மேலும் பார்க்க