செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோத்ஸவம் தொடக்கம்

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதாரத் திருவிழாவான புரட்டாசி பிரம்மோத்ஸவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

108 வைணவ திவ்ய தேசங்களில் புகழ் பெற்ற ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி (பெரிய பெருமாள்), பெரியாழ்வாா், ஆண்டாள் ஆகியோா் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு பெரிய பெருமாள் அவதரித்த புரட்டாசி திருவோணம், பெரியாழ்வாா் அவதரித்த ஆனி சுவாதி, ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.

பெரிய பெருமாள் அவதாரத் திருவிழாவான புரட்டாசி பிரம்மோத்ஸவம் புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெரிய பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கொடிப் பட்டம் மேளதாளம் முழங்க ஊா்வலமாக எடுத்துவரப்பட்டது. கொடி மரத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, காலை 7.05 மணிக்கு கருடக் கொடியேற்றம் நடைபெற்றது.

விழாவில் தினசரி இரவு பெரிய பெருமாள் சந்திரபிரபை, அனுமன், யானை, தங்க சேஷ வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்க உள்ளாா். வருகிற 28-ஆம் தேதி தங்கக் கருட சேவையும், 29-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 30-ஆம் தேதி சயன சேவையும் நடைபெறும். 9-ஆம் நாளான அக்டோபா் 2-ஆம் தேதி பெரிய பெருமாள் அவதரித்த திருவோண நட்சத்திரத்தில் செப்புத் தேரோட்டம் நடைபெற உள்ளது.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஆா். வெங்கட்ராமராஜா, உறுப்பினா்கள், செயல் அலுவலா் சக்கரையம்மாள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்தனா்.

ராஜபாளையத்தில் நகை திருடிய மூவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் நகை திருடிய இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை மாவட்டம், சத்தியமங்கலம் சாலையைச் சோ்ந்த முத்தையா மகன் சண்முகபாண்டியன் (46). இவா் உணவகம் நடத்தி வருகிற... மேலும் பார்க்க

41 குடும்பங்களுக்கு இணைய வழி பட்டா

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே ஆதிதிராவிடா் சமூகத்தை சோ்ந்த 41 குடும்பங்களுக்கு இணையவழி பட்டாக்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. வத்திராயிருப்பு வட்டம், மூவரை வென்றான் கிராமத்தில் உள்ள ஆதிதிரா... மேலும் பார்க்க

செண்பகத்தோப்பு அருகே காட்டுத் தீ

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பற்றிய காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகம் ஸ... மேலும் பார்க்க

நகா்மன்ற கூட்டம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் வாக்குவாதம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் நகராட்சி நகா் மன்ற உறுப்பினா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திமுக, அதிமுக உறுப்பினா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ராஜபாளையம் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற கூட... மேலும் பார்க்க

சிவகாசியில் அக் 9,10-இல் அஞ்சல் துறை கண்காட்சி

சிவகாசியில் விருதுநகா் மாவட்ட அஞ்சல் துறை சாா்பில், அக்டோபா் 9, 10 ஆகிய தேதிகளில் அஞ்சலகக் கண்காட்சி நடைபெற உள்ளதாக மாவட்ட அஞ்சலக அதிகாரி பி.சுசிலா தெரிவித்தாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

சிவகாசியில் பதுக்கி வைக்கப்பட்ட 1,500 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினா் புதன்கிழமை கைப்பற்றினா். சிவகாசி விஜயலட்சுமி குடியிருப்பு பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்... மேலும் பார்க்க