செய்திகள் :

ஸ்ரேயா கோஷல் கரியர் பற்றி பரவிய நியூஸ்; 'அது பொய்... உஷாராக இருங்கள்!'- மக்களை எச்சரிக்கும் டி.ஜி.பி

post image

சமீபத்தில், 'பாடகி ஸ்ரேயா கோஷலின் கரியர் முடியப்போவதாகவும், அதற்கு காரணம் அவர் மைக் ஆன் ஆகியிருப்பது தெரியாமல் பேசியதும்' என்ற போஸ்ட் மற்றும் நியூஸ் லிங்க் வைரலாகியது. இப்படி பரவிய இந்த நியூஸ் லிங்க் பிரபல செய்தி நிறுவனத்துடையது போன்று இருந்தது.

அந்தப் போஸ்ட்டுகளும், நியூஸ் லிங்கும் போலியானது என்றும் இந்த வகை மோசடிகளில் இருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு சைபர் க்ரைமின் கூடுதல் டி.ஜி.பி எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, "வெறும் 10 - 15 ஃபாலோயர்கள் கொண்ட வெரிஃபைட் எக்ஸ் பக்கங்கள் ஸ்ரேயா கோஷல் குறித்த விளம்பரங்களை பரப்பி வருகிறது. அவை மோசடி வலையே. இந்த வலை மூலம் மக்களை ஏமாற்றி சைபர் மோசடியில் விழ செய்ய முயல்கிறார்கள். அதனால், அலர்ட்டாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள்.

எக்ஸ் வலைதளம் இந்த மாதிரி குற்ற செயல்களில் ஈடுபடும் எக்ஸ் பக்கங்களை கண்டுபிடிக்கும் மற்றும் பிளாக் செய்யும் மெக்கானிசத்தை கொண்டிருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

ஸ்ரேயா கோஷல் குறித்து வந்த அனைத்து நியூஸ் லிங்குகளுக்கு மேலும் 'சப்ஸ்கிரைப்' என்ற ஆப்ஷன் உள்ளது. அந்த செய்தியை தெரிந்துகொள்ள அதை கிளிக் செய்து தனது சுய விவரங்களை பதிவு செய்து, பணம் கட்டினால் வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணமும், போனில் இருக்கும் முக்கிய தகவல்களும் திருடப் போக மிக அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது எனவும் கூறுகிறார்கள்.

போதைப்பொருள் கடத்தல்; அமெரிக்க FBI தேடிவந்த இந்திய வம்சாவளி... பஞ்சாப்பில் கைதுசெய்த போலீஸ்!

அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் ஷெஹ்னாஸ் சிங். இவர் கொலம்பியாவில் இருந்து அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு போதைப்பொருள் கடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த 26ம் தேதி அமெரிக்காவி... மேலும் பார்க்க

பீகார்: பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்த ஆயுதமேந்திய கும்பல்! - ரூ.25 கோடி மதிப்பிலான நகை கொள்ளை

பீகாரின் அர்ராவில் உள்ள தனிஷ்க் ஷோரூமில் இன்று ஆயுதமேந்திய கொள்ளையர்கள் புகுந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர். பீகார் மாநிலம், அர்ரா காவல் நிலையப் பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க

5 கொரிய பெண்கள்; Excel Sheet, ரகசிய கேமரா- ஆஸ்திரேலியாவில் பாலியல் வழக்கில் சிக்கிய இந்திய வம்சாவளி!

ஆஸ்திரேலியாவில் ஐந்து தென்கொரிய பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜக பிரமுகருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வசித்து வருபவர் பாலேஷ் தன்கர். இந... மேலும் பார்க்க

பள்ளிக் காதலால் சந்தேகம்; மனைவியை சிக்கவைக்க விஷம் குடித்த புது மாப்பிள்ளை பலி - நடந்தது என்ன?

கடலூர் மாவட்டத்திலுள்ள கிராமத்தைச் சேர்ந்த கலையரசன் என்பவருக்கும், மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த பிரியா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்பவருக்கும் கடந்த ஜனவரி 25-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலைய... மேலும் பார்க்க

திருப்பதி கோயில் வீடியோ விவகாரம்: TTF வாசனின் வங்கி கணக்கு முடக்கம்

டி.டி.எஃப் வாசன் என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது. தனது வீடியோக்கள், செயல்கள் ஆகியவற்றால் தொடர்ந்து சர்ச்சையில் மாட்டி வருகிறார் டி.டி.எஃப் வாசன். கடந்த ஆண்டு, ஜூலை மாதம் திருப்பதிக்கு சென்றிருக்கிறார் ... மேலும் பார்க்க

பாஜக நிர்வாகி மீதான போக்சோ வழக்கு: "குற்றம் செய்ததாகவே தெரிகிறது" - ஜாமீன் மறுப்பு; பின்னணி என்ன?

வழக்கின் தன்மை, ஆவணங்களை மட்டும்தான் நீதிமன்றம் பார்க்கும், அரசியல் பற்றிப் பேச வேண்டாம் என்று போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பா.ஜ.க மாநில நிர்வாகியின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்ற... மேலும் பார்க்க