செய்திகள் :

திருப்பதி கோயில் வீடியோ விவகாரம்: TTF வாசனின் வங்கி கணக்கு முடக்கம்

post image

டி.டி.எஃப் வாசன் என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது. தனது வீடியோக்கள், செயல்கள் ஆகியவற்றால் தொடர்ந்து சர்ச்சையில் மாட்டி வருகிறார் டி.டி.எஃப் வாசன்.

கடந்த ஆண்டு, ஜூலை மாதம் திருப்பதிக்கு சென்றிருக்கிறார் டி.டி.எஃப் வாசன். அங்கே திருப்பதி கோவிலில் மொபைல் போன், வீடியோ கேமராக்கள் என எவற்றிற்குமே அனுமதி கிடையாது.

ஆனால், திருப்பதி கோவிலில் தரிசனத்திற்காக வரிசையில் நின்றிருந்த வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார் டி.டி.எஃப் வாசன். இதனால், இவர் மீது வழக்கு பதிவு செய்து திருமலை தேவஸ்தான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கி கணக்கை முடக்கிய போலீஸார்

அதில் ஒரு பகுதியாக, திருமலை தேவஸ்தான போலீஸார் டி.டி.எஃப் வாசனின் வங்கி கணக்கை முடக்கியுள்ளது. இந்தத் தகவலை அவரது வழக்கறிஞர் முத்து தான் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர் டி.டி.எஃப் வாசனுக்கு முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஸ்ரேயா கோஷல் கரியர் பற்றி பரவிய நியூஸ்; 'அது பொய்... உஷாராக இருங்கள்!'- மக்களை எச்சரிக்கும் டி.ஜி.பி

சமீபத்தில், 'பாடகி ஸ்ரேயா கோஷலின் கரியர் முடியப்போவதாகவும், அதற்கு காரணம் அவர் மைக் ஆன் ஆகியிருப்பது தெரியாமல் பேசியதும்' என்ற போஸ்ட் மற்றும் நியூஸ் லிங்க் வைரலாகியது. இப்படி பரவிய இந்த நியூஸ் லிங்க் ... மேலும் பார்க்க

5 கொரிய பெண்கள்; Excel Sheet, ரகசிய கேமரா- ஆஸ்திரேலியாவில் பாலியல் வழக்கில் சிக்கிய இந்திய வம்சாவளி!

ஆஸ்திரேலியாவில் ஐந்து தென்கொரிய பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜக பிரமுகருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வசித்து வருபவர் பாலேஷ் தன்கர். இந... மேலும் பார்க்க

பள்ளிக் காதலால் சந்தேகம்; மனைவியை சிக்கவைக்க விஷம் குடித்த புது மாப்பிள்ளை பலி - நடந்தது என்ன?

கடலூர் மாவட்டத்திலுள்ள கிராமத்தைச் சேர்ந்த கலையரசன் என்பவருக்கும், மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த பிரியா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்பவருக்கும் கடந்த ஜனவரி 25-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலைய... மேலும் பார்க்க

பாஜக நிர்வாகி மீதான போக்சோ வழக்கு: "குற்றம் செய்ததாகவே தெரிகிறது" - ஜாமீன் மறுப்பு; பின்னணி என்ன?

வழக்கின் தன்மை, ஆவணங்களை மட்டும்தான் நீதிமன்றம் பார்க்கும், அரசியல் பற்றிப் பேச வேண்டாம் என்று போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பா.ஜ.க மாநில நிர்வாகியின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்ற... மேலும் பார்க்க

திண்டுக்கல்: மாந்தோப்பில் சுற்றித்திரிந்த குரங்கை சுட்டுக் கொன்று சாப்பிட்ட இருவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் வீர சின்னம்பட்டியில் மாந்தோப்பில் தொல்லை செய்த குரங்கை பணம் கொடுத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல கூறிய தோட்டத்துக்காரர், அதை கொன்று வீட்டிற்கு எடுத்து வந்து சமைத்து சாப்பிட்ட தொ... மேலும் பார்க்க

Kerala: போலீஸாரிடம் சிக்காமல் இருக்க MDMA போதைப்பொருள் பாக்கெட்டை விழுங்கிய இளைஞர் மரணம்

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரியை சேர்ந்த இளைஞர் இய்யாடன் ஷானித் (28). இவர் நேற்று முன்தினம் சாலை ஓரத்தில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் தாமரச்சேரி போலீஸ... மேலும் பார்க்க