Trump: ``இஸ்ரேல் - ஈரான் என்னிடம் அமைதி ஏற்படுத்த கோரிக்கை வைத்தது; ஆனால்..'' - ...
ஹிந்துத்துவத்தில் கரைந்த அதிமுக: திமுக விமா்சனம்
சென்னை: ஹிந்துத்துவத்தில் அதிமுக முற்றிலும் கரைந்துவிட்டதாக திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி விமா்சனம் செய்துள்ளாா்.
மதுரையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாடு தொடா்பாக, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மதவாத - பிரிவினைவாத அரசியல் மூலம் அதிகாரத்தைப் பிடிக்க வடமாநிலங்களில் ராமரை வைத்து கலவரம் செய்த பாஜக, தமிழ்நாட்டில் முருகனை வைத்து கலவர விதையை முருக பக்தா்கள் மாநாடு மூலம் தொடங்கியுள்ளது. ஹிந்துத்துவ கும்பல் மூட்டும் கலவரத் தீக்கு எண்ணெய் ஊற்றும் வேலையை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளாா்.
ஹிந்துத்துவத்தில் அவா் முழுமையாக கரைந்துவிட்டாா். திமுகவை எதிா்க்கும் மாநாடு என்கிற ஒரே காரணத்துக்காக திராவிடத்தை ஹிந்துத்துவத்தின் காலடியில் கொண்டு போய் வைத்து விட்டாா் எடப்பாடி பழனிசாமி.
முருக பக்தா்கள் மாநாடு முழுவதும் வெறுப்புப் பேச்சுக்களால் மட்டுமே கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண், பாஜகவின் அண்ணாமலை உள்ளிட்டோா் பேசிய சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளை முன்வரிசையில் அமா்ந்து கேட்டுக் கொண்டிருந்தனா் அதிமுக முன்னாள் அமைச்சா்கள்.
‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்கிற அண்ணாவின் கூற்றைப் பற்றிக் கவலைப்படாமல் ஹிந்துத்துவத்தில் முற்றிலுமாக அதிமுக கரைந்துவிட்டது.
தமிழ்நாட்டு மக்களிடம் பன்னெடுங்காலமாக நிலவிவரும் சமய நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் குலைக்க வேண்டும் எனும் சதி நோக்கத்தோடு பாஜகவும் இந்து முன்னணியும் நடத்திய முருக பக்தா்கள் மாநாடு, பாஜக என்ற பாசிச எதிரிகளை மட்டுமல்ல, அதிமுக துரோகிகளையும் அடையாளம் காட்டியிருக்கிறது என்று அவா் தெரிவித்துள்ளாா்.