செய்திகள் :

ஹிமாசலத்தில் மேகவெடிப்பு! வெள்ளத்தால் உயரும் உயிர் பலிகள்.. 20 பேர் மாயம்!

post image

ஹிமாசல பிரதேசத்தின் காங்கரா மற்றும் குலு ஆகிய மாவட்டங்களில் மேகவெடிப்பால் பெய்த கனமழையால், வெள்ளம் ஏற்பட்டு 20 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காங்கரா மற்றும் குலு ஆகிய மாவட்டங்களில், நேற்று (ஜூன் 25) மாலை மேகவெடிப்பு ஏற்பட்டு, கனமழை பெய்துள்ளது. இதனால், அங்குள்ள பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஏராளமானோர் அடித்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், காங்கராவிலுள்ள இந்திர பிரியதர்ஷினி நீர்மின் திட்டப் பகுதியில், பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 15 - 20 தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். மேலும், வெள்ளத்தில் பலியான 2 தொழிலாளர்களின் உடல்கள் நேற்று மாலை மீட்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, இன்று (ஜூன் 26) காலை முதல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வந்ததில்; மேலும் 2 தொழிலாளிகளின் உடல்கள் மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதன்மூலம், வெள்ளத்தில் பலியானோரது எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ள நிலையில், மாயமான 8 பேரை தேடும் பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்துடன், குலு மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 14 வயதுடைய சிறுவன் உள்பட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடுமையான பாறைகள் மற்றும் சமநிலை இல்லாத நிலப்பரப்பினால் அப்பகுதியில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது சிரமமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணிகளால், வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் எண்ணிக்கைகள் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

SUMMARY

Cloudburst floods in Himachal Pradesh! Death toll rises, 20 people missing!

இதையும் படிக்க:அகமதாபாத் விமான விபத்து: கறுப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் மீட்பு!

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் பணிபுரிந்த பாகிஸ்தான் உளவாளி! 2 ஆண்டு கண்காணிப்பில் திடுக் தகவல்!

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த இந்திய கடற்படை பிரிவு அதிகாரி விகாஸ் யாதவ் கைது செய்யப்பட்டார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் படுகொலை ... மேலும் பார்க்க

ஈரானில் இருந்து 3,400 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: வெளியுறவுத் துறை!

"ஆபரேஷன் சிந்து" மீட்புத் திட்டத்தின் மூலம் ஈரானிலிருந்து சுமார் 3,400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடை... மேலும் பார்க்க

தேர்தலில் போட்டியிடாத 345 அரசியல் கட்சிகள் நீக்கம்!

நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு, ... மேலும் பார்க்க

அடுத்தக்கட்ட வர்த்தக பேச்சு! வாஷிங்டன் சென்றடைந்த இந்திய குழு!

அமெரிக்காவுடனான அடுத்த சுற்று வர்த்தக பேச்சுவார்த்தைக்காக, ராஜேஷ் அகர்வால் தலைமையிலான இந்திய குழுவொன்று அந்நாட்டு தலைநகர் வாஷிங்டனுக்கு சென்றடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான, வர்த்தக பே... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் அதிரடி நடவடிக்கை! ஜெய்ஷ் பயங்கரவாதி சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீரில், பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில், ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். உதம்பூர் மாவட்டத்தின் பிஹாலி பகுதியில், கடந்த ஓராண்டுக்கு மேலாகத் த... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்காகவே வாக்களிக்கின்றனர்; சாதிக்காக அல்ல: பிரசாந்த் கிஷோர்

பிகாரில் தேர்தல்களில் சாதி அடிப்படையில் வாக்களிக்கப்படுவதாக எழுந்த கருத்துக்கு ஜன் சுராஜ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.பிகாரில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்... மேலும் பார்க்க