Ahmedabad Plane Crash : பறவை மோதியதா இல்லை மனித தவறா? | Detailed Technical Expla...
1,050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இளைஞா் கைது
தஞ்சாவூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,050 கிலோ ரேஷன் அரிசியை காவல் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்து, இளைஞரை கைது செய்தனா்.
தஞ்சாவூரில் ரேஷன் அரிசியைக் குறைந்த விலைக்கு வாங்கி மீன் பண்ணை, கால்நடை தீவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தஞ்சாவூா் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் வடக்கு வாசல் ஏ.ஒய்.ஏ. நாடாா் சாலை பகுதியில் தஞ்சாவூா் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதில், முனியாண்டவா் கோயில் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த தலா 50 கிலோ எடை கொண்ட 21 மூட்டைகளில் இருந்த 1,050 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக கீழவாசல் சித்தா் மண்டபம் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ராஜ்குமாரை (28) கைது செய்தனா்.