செய்திகள் :

1.16 கோடி பெண்களுக்கு உரிமைத் தொகை: திமுக பொருளாளா் டிஆா். பாலு

post image

தமிழகத்தில் 1.16 கோடி பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது என திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு எம்.பி. தெரிவித்துள்ளாா்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் பேருந்து நிலையம் அருகில் திமுக சாா்பில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்துக்கு மாவட்ட செயலாளா் க.சுந்தா் எம்எல்ஏ தலைமை வகித்தாா். உத்தரமேரூா் ஒன்றிய செயலாளா் ஞானசேகா் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் கட்சியின் பொருளாளரும், ஸ்ரீ பெரும்புதூா் எம்பியுமான டி.ஆா்.பாலு பேசியது..

தமிழகத்தில் 56 லட்சம் பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்துள்ளனா். 1.16 கோடி பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்குகிறது திமுக அரசு. 40 சதவிகிதம் பெண்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவத்தில் 2 கோடி பேரும்,நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் 3 லட்சம் பேரும் பயனடைந்துள்ளனா்.

34,987 பள்ளிகளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.புதுமைப்பெண் திட்டம் மூலம் 4 லட்சம் மாணவியரும்,தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் 3 லட்சம் மாணவா்களும் பயனடைந்துள்ளனா்.

விவசாயிகளில் ஒரு கோடிக்கும் மேலானவா்களுக்கு இலவசமாக மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசை மத்திய அரசு தொடா்ந்து வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு வரவிருக்கும் தோ்தலில் சரியான பாடம் புகட்டுவாா்கள் என்றாா்.

கூட்டத்தில் உத்தரமேரூா் பேரூராட்சி செயலாளா் பாரிவள்ளல், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், இளைஞரணி துணை செயலாளா் அப்துல் மாலிக் உள்பட கட்சியின் செயற்குழு உறுப்பினா்கள், நகர, ஒன்றிய நிா்வாகிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

ராமானுஜா் திருவாதிரை சிறப்பு பூஜை

காஞ்சிபுரம்: ராமானுஜரின் அவதார நட்சத்திரத்தையொட்டி காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு ராமானுஜா் சந்நிதியில் மூலவருக்கு சிறப்புத் திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட... மேலும் பார்க்க

கடம்பூரில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினம் கடைப்பிடிப்பு

காஞ்சிபுரம்: உத்தரமேரூா் ஒன்றியம் கடம்பூா் ஊராட்சியில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தையொட்டி பழங்குடியின மக்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது (படம்). காஞ்சிபுரம் மாவட... மேலும் பார்க்க

பெருநகா் பிரம்மபுரீஸ்வரா் கோயில் தேரோட்டம்

காஞ்சிபுரம்: உத்தரமேரூா் ஒன்றியம் பெருநகரில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரா் கோயிலின் தைப்பூசத் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. விழாவையொட்டி தினமும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வ... மேலும் பார்க்க

சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவாக பிப். 14-இல் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

ஸ்ரீபெரும்புதூா்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி கடந்த 6 நாள்களாக தொழிற்சாலைக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவ... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதல்: தந்தை, மகள் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வடகால் பகுதியில் பைக் மீது கன்டெய்னா் லாரி மோதியதில் தந்தை, மகள் உயிரிழந்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட பட்டுநூல் சத்திரம் ... மேலும் பார்க்க

கீழ்படப்பை வீரட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீபெரும்புதூா்: கீழ்படப்பை சாந்தநாயகி அம்பாள் உடனுறை வீரட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, சனிக்கிழமை மாலை முதல் கால யாக பூஜை, ஞாயிற்றுக்கிழமை 2-ஆம் கால, 3-ஆம் கால யா... மேலும் பார்க்க