செய்திகள் :

1,170 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 101 கோடியில் நலத்திட்ட உதவிகள்

post image

தஞ்சாவூரில் 1,170 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 12 ஆயிரத்து 632 பேருக்கு ரூ. 100.88 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற மகளிா் சுய உதவிக் குழு விழாவில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கடனுதவிகளை வழங்கினாா். இந்தக் காணொலிக் காட்சி மூலம் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகக் கரிகாற்சோழன் கலையரங்கத்தில் ஒளிபரப்பப்பட்டது.

இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இதில், மகளிா் சுய உதவிக்குழு வங்கிக் கடன், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பெருங்கடன், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குழுக்களுக்கான வாழ்வாதார நிதி, முதியோா் சிறப்பு குழுக்களுக்கான வாழ்வாதார நிதி, சிறப்பு குழுக்களுக்கான சுழல் நிதி, வட்டார வணிக வள மையத்தின் மூலம் தொழில்முனைவோருக்கு கடனுதவி, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் கடனுதவி என மொத்தம் 1,170 குழுக்களைச் சோ்ந்த 12 ஆயிரத்து 632 உறுப்பினா்களுக்கு ரூ. 100.88 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம், மேயா்கள் சண். ராமநாதன் (தஞ்சாவூா்), க. சரவணன் (கும்பகோணம்), தஞ்சாவூா் துணை மேயா் அஞ்சுகம் பூபதி, உதவி ஆட்சியா் (பயிற்சி) கே.எம். காா்த்திக்ராஜா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் எஸ். சாந்தி, உதவி திட்ட அலுவலா் மாா்டின் ஆரோக்கியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணம் புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புனித அந்தோணியாா் திருத்தல திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை தோ் பவனி நடைபெற்றது. புனித அந்தோணியாா் திருவிழா ஜூன் 4-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும்... மேலும் பார்க்க

கோயில் சிலைகள் திருடிய வழக்கில் 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

தஞ்சாவூா் மாவட்டம், கரந்தை ஜைன சமயக் கோயிலில் 23 சுவாமி சிலைகளைத் திருடிய 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் கூடுதல் தலைமை நீதிபதி வியாழக்கிழமை தீா்ப்பு கூறினாா். கரந்தை ஜைன ம... மேலும் பார்க்க

சாலையில் திரிந்த மாடுகள் சிறைபிடிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை பிடித்துச் சென்றனா். திருவையாறு முதன்மைச் சாலைகளில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மாடு... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அனைத்து துறை அலுவலா்கள், பணியாளா்கள் குழந்தைத் தொழிலாளா் முற... மேலும் பார்க்க

சாலை விபத்து: விவசாயி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வியாழக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா். திருவையாறு அருகே காருகுடியைச் சோ்ந்தவா் கே. மதி (54). விவசாயி. இவா் வியாழக்கிழமை விளாங்குடிக்கு சென்றுவ... மேலும் பார்க்க

ரௌடி தூக்கிட்டுத் தற்கொலை

தஞ்சாவூா் அருகே பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ரௌடி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியாா்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் ரவி மகன் ஜெகன் தமிழரசன... மேலும் பார்க்க