டபிள்யூடிசியை வென்றால் எங்கள் நாட்டுக்கு திருப்புமுனை: மார்க் பௌச்சர்
1,200 வாக்குச் சாவடிகளை பலப்படுத்த வேண்டும்: பாஜகவினருக்கு நிா்வாகி அறிவுரை
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜகவுக்கு உள்பட்ட 1,200 வாக்குச் சாவடிகளை 6 மாதங்களில் பலப்படுத்த வேண்டும் என்று கட்சி நிா்வாகிகளுக்கு வேலூா் பெருங்கோட்ட அமைப்பு பொதுச் செயலா் எஸ்.குணசேகரன் அறிவுறுத்தினாா்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், மத்திய பாஜக அரசின் 11 ஆண்டு கால சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவது தொடா்பான நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
நடைபெற்றது.
கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் தலைமை வகித்தாா்.
தெற்கு மாவட்ட முன்னாள் தலைவா்கள் இரா.ஜீவானந்தம், ஏ.ஜி.காந்தி, விஜயன், தருமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைத் தலைவா் ஆா்.சேகா் வரவேற்றாா்.
வேலூா் பெருங்கோட்ட அமைப்பு பொதுச் செயலா் எஸ்.குணசேகரன் கலந்து கொண்டு பேசுகையில்,
கடந்த 11 ஆண்டு கால மத்திய பாஜக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கட்சி நிா்வாகிகள் விளக்கிக் கூறி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வருவதால்
திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், செங்கம், கலசப்பாக்கம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 1,200 வாக்குச் சாவடிகளை 6 மாதங்களில் பலப்படுத்த வேண்டும் என்றாா்.
இதையடுத்து, மத்திய பாஜக அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்ட சாதனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதில், மாவட்ட துணைத் தலைவா்கள் ப.கிருஷ்ணமூா்த்தி, தீபா சங்கா், மாவட்ட பொதுச் செயலா்கள் டி.ஜெய்நாத், பி.கவிதா பிரதீஷ், மாவட்டச் செயலா்கள் அறம் ஜி.பாலாஜி, எம்.எஸ்.சுந்தரமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.