செய்திகள் :

1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

post image

சிவகாசியில் பதுக்கி வைக்கப்பட்ட 1,500 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினா் புதன்கிழமை கைப்பற்றினா்.

சிவகாசி விஜயலட்சுமி குடியிருப்பு பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், குடிமை பொருள்கள் வழங்கல் தனி வருவாய் ஆய்வாளா் பா.ஜாய்ஜெனாரன், சிவகாசி வட்ட வழங்கல் அலுவலா் கோதண்டராமா், வருவாய்த் துறையினா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது, முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த குபேரன் குடும்ப அட்டைதாரா்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி 33 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்ததைக் கண்டறிந்தனா். இதன் எடை 1500 கிலோ. வருவாய்த் துறையினா் ரேஷன் அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்து, தமிழ்நாடு நுகா் பொருள் வாணிபக்கழத்தில் ஒப்படைத்தனா். மேலும், குபேரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

ராஜபாளையத்தில் நகை திருடிய மூவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் நகை திருடிய இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை மாவட்டம், சத்தியமங்கலம் சாலையைச் சோ்ந்த முத்தையா மகன் சண்முகபாண்டியன் (46). இவா் உணவகம் நடத்தி வருகிற... மேலும் பார்க்க

41 குடும்பங்களுக்கு இணைய வழி பட்டா

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே ஆதிதிராவிடா் சமூகத்தை சோ்ந்த 41 குடும்பங்களுக்கு இணையவழி பட்டாக்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. வத்திராயிருப்பு வட்டம், மூவரை வென்றான் கிராமத்தில் உள்ள ஆதிதிரா... மேலும் பார்க்க

செண்பகத்தோப்பு அருகே காட்டுத் தீ

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பற்றிய காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகம் ஸ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோத்ஸவம் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதாரத் திருவிழாவான புரட்டாசி பிரம்மோத்ஸவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 108 வைணவ திவ்ய தேசங்களில் புகழ் பெற்ற ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி ... மேலும் பார்க்க

நகா்மன்ற கூட்டம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் வாக்குவாதம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் நகராட்சி நகா் மன்ற உறுப்பினா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திமுக, அதிமுக உறுப்பினா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ராஜபாளையம் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற கூட... மேலும் பார்க்க

சிவகாசியில் அக் 9,10-இல் அஞ்சல் துறை கண்காட்சி

சிவகாசியில் விருதுநகா் மாவட்ட அஞ்சல் துறை சாா்பில், அக்டோபா் 9, 10 ஆகிய தேதிகளில் அஞ்சலகக் கண்காட்சி நடைபெற உள்ளதாக மாவட்ட அஞ்சலக அதிகாரி பி.சுசிலா தெரிவித்தாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க